|
இந்திரர்க்கு இந்திராணி இசைந்துஅருகிருக்க |
வந்து அகலிகையை மருவிப் புணரலையோ20 |
|
எடச்சிகள் சேலையெலாம் எடுத்து மரமேறி |
கடைக்கண்ணாள் பார்த்திருந்தார் கன்னியர் மேலாசையதால் |
|
வர்ணமுள்ள மாயவனார் வாழும் இடைச்சியுடன் |
வெண்ணெய் திருடியுண்டு மேவிப் புணரலையோ |
|
பார்த்தனும் சுபத்திரையாள் பாங்காய் கலந்திருக்க |
வேத்துமையாய் அல்லியரை மேவிப் புணரலையோ |
|
சாதனமாய் கண்ணகியும் தானி்ருக்கக்கோவலனார் |
மாதவியைக் கூடி மருவிப் புணரலையோ |
|
கானத் தபசிருக்கும் கௌசிகரும் ஆசையதால் |
மேனகையைக் கூடி மேவிப் புணரலையோ |
|
வருத்தும் வசிஷ்டரிஷி வையகத்தி லெப்போதும் |
அருந்ததிப் பெண்ணாளை அணைந்து கலரலையோ |
|
முன்னும் சிலபெரியோர் மூம்மூர்த்தி தான்முதலாய் |
வர்ணமுள்ள பெண்களுடன் மருவிப் புணரலையோ |
இன்னமொரு வார்த்தை இசைந்துரைக்க நீர்கேளும் |
|
|
பட்சமுடன் போசனத்தை கையாலேந்தி |
பாலமிர்தம் புகட்டினதால் பயனுண்டாமோ |
|
இச்சையுடன் கலிதனக்கு மாலையிட்டாள் |
இதுபெரிதோ அறியாம லெரிந்துபோடும் |
|
உச்சிதமாய் தேள்விஷங்கள் பந்து ருமாந்தர் |
உறுதியுடன் துஷ்டருக்குச் சொன்னபுத்தி |
|
அட்சணமே போய்விடுங்காண் சொன்னேன் |
அரசனே என்வசனம் கேட்பீரே |
|
|
கேட்டிடுவீர் வீரய்யனும் விருப்பமுடன் |
கொண்டுமிகப் பெண்ணொளித்தார் கிருட்டிணனும் |
|
நாட்டமுடன் இந்திரரும் அகலிகைக்காய் |
நலமுடனே சாபம்பெற்றான் முனிவரிடத்தில் |