|
| நாடெல்லாம் சுற்றி நடந்துவந் தெந்தனுட |
| வீடல்லாம் வேற வீட்டில் படுத்தறியேன் |
| |
| தகப்பன் சேப்பிளையான் தன்னுடைய பஞ்சணையில் |
| உகந்து படுத்திருப்பேன் உத்தமனே ஆரியப்பா |
| |
| உந்தனுட ஆக்கினைக்கு உட்பட்டு யானிருக்க |
| சந்தேகங்கள் சொல்லுகிறேன் சாமியினிக் கேளுமைய்யா |
| |
| சோமாசி பெற்ற சத்தரியாள் மாலையரை |
| காம ரதியாளைக் களவில் எடுத்தேனோ |
| |
| அய்யமார் பெண்ணை அநியாய மாகவேதான் |
| மெய்யாக யான்சிறையாய் விரும்பி யெடுத்தேனோ |
| |
| ஆசையது கொண்டு அய்யமார் பெண்ணை |
| பாசையினால் மந்திரித்துப் படுங்களவு செய்தேனோ |
| |
| மாறாக நடத்தைதப்பி மாறுபா டாகவேதான் |
| சோர மிகச்செய்து சிறையெடுத்துப் போனேனோ |
| |
| சோசியத்தில் நானும் சுந்தரியாள் மாலையரை |
| ராத்திரி வேளையிலே நற்சிறைகள் எடுத்தேனோ |
| |
| பாரில் சிறையெடுத்துப் பார்ப்பாரப் பெண்ணாலே |
| ஊரைவிட்டு நானும் ஓடியே போனேனோ |
| |
| அட்டாவ தானியைப்போல் ஆள்குடைய கிண்ணரியும் |
| பட்டப் பகல்தனிலே பாடிநான் வருகையிலே |
| |
| ஆத்தங் கரைதனிலே அநேகம்பேர் பார்த்திருக்க |
| இதமுள்ள நீராட ஏகினேன் நீர்கேளும் |
| |
| தண்ணீர்த் துறைதனிலே தான்கண்டு மாலையரும் |
| என்னழகைக் கண்டு இனிதுமையல் தானாகி |
| |
| |
| என்கிண்ணாரச் சத்தம் கேட்டுமிகத் தான்நடந்தாள்22 |
| மாலையரே என்பின்னே வாராதே என்றுசொன்னேன் |
| |
| சோலைக்கிளி மொழியாள் என்சொல்வசனம் கேட்காமல் |
| வாரதைக் கண்டு மனதில் பயம்பிடித்து |
| |
| பார்தனிலே நானும் பறையன் பறையனென்றேன் |
| சீருடனே நில்லாமல் திரும்பிவரக் கண்டருளி |
| |
| வருசையுடன் கைபிடித்து மாட்டாயக் காரர்தனை |
| கூட்டி நடந்து கோமுதலைப் பாரில்வைத்து |