காத்தவராயன் கதைப்பாடல்41

நாடெல்லாம் சுற்றி நடந்துவந் தெந்தனுட
வீடல்லாம் வேற வீட்டில் படுத்தறியேன்
 
தகப்பன் சேப்பிளையான் தன்னுடைய பஞ்சணையில்
உகந்து படுத்திருப்பேன் உத்தமனே ஆரியப்பா
 
உந்தனுட ஆக்கினைக்கு உட்பட்டு யானிருக்க
சந்தேகங்கள் சொல்லுகிறேன் சாமியினிக் கேளுமைய்யா
 
சோமாசி பெற்ற சத்தரியாள் மாலையரை
காம ரதியாளைக் களவில் எடுத்தேனோ
 
அய்யமார் பெண்ணை அநியாய மாகவேதான்
மெய்யாக யான்சிறையாய் விரும்பி யெடுத்தேனோ
 
ஆசையது கொண்டு அய்யமார் பெண்ணை
பாசையினால் மந்திரித்துப் படுங்களவு செய்தேனோ
 
மாறாக நடத்தைதப்பி மாறுபா டாகவேதான்
சோர மிகச்செய்து சிறையெடுத்துப் போனேனோ
 
சோசியத்தில் நானும் சுந்தரியாள் மாலையரை
ராத்திரி வேளையிலே நற்சிறைகள் எடுத்தேனோ
 
பாரில் சிறையெடுத்துப் பார்ப்பாரப் பெண்ணாலே
ஊரைவிட்டு நானும் ஓடியே போனேனோ
 
அட்டாவ தானியைப்போல் ஆள்குடைய கிண்ணரியும்
பட்டப் பகல்தனிலே பாடிநான் வருகையிலே
 
ஆத்தங் கரைதனிலே அநேகம்பேர் பார்த்திருக்க
இதமுள்ள நீராட ஏகினேன் நீர்கேளும்
 
தண்ணீர்த் துறைதனிலே தான்கண்டு மாலையரும்
என்னழகைக் கண்டு இனிதுமையல் தானாகி
 
 
என்கிண்ணாரச் சத்தம் கேட்டுமிகத் தான்நடந்தாள்22
மாலையரே என்பின்னே வாராதே என்றுசொன்னேன்
 
சோலைக்கிளி மொழியாள் என்சொல்வசனம் கேட்காமல்
வாரதைக் கண்டு மனதில் பயம்பிடித்து
 
பார்தனிலே நானும் பறையன் பறையனென்றேன்
சீருடனே நில்லாமல் திரும்பிவரக் கண்டருளி
 
வருசையுடன் கைபிடித்து மாட்டாயக் காரர்தனை
கூட்டி நடந்து கோமுதலைப் பாரில்வைத்து