பக்கம் எண் :

166கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

என்றுரைத்த போதும் இருநிலத்து மாந்தரெலாம்
நன்றியின்றிச் செய்துவரும் நாலா யிரம்பிழையும்
ஏற்றுப் பொறுக்குமெனை எள்ளி நிலந்தன்னைச்
சாற்றும் பொறுமைக்குச் சான்றோர் உவமிப்பர்!
செல்வரென அல்லரெனச் சிந்தித்துப் பார்ப்பதிலை
அல்லரென நல்லரென ஆய்தல் எனக்கில்லை
நெல்லுக்கும் புல்லுக்கும் நேர்நின் றுதவிடுவேன்
சொல்லுக்குச் சொல்லவிலை; தோழர் அனைவருமே
சாதி சமயங்கள் சண்டையிடுங் கட்சிஎன
ஓதி வருவார்கள் ஒன்றையும் நான்பாரேன்;90
எல்லாரும் நல்லரென்பேன் யாவருங் கேளிரென்பேன்
பொல்லார் எனவுரையேன் பூணும் பகையறியேன்;
ஆனாலும் ஓர்பகைவன் அந்தோ இருக்கின்றான்;
மேனாள்தொட் டென்னிடத்து மேவாப் பகைகொண்டான்;
தீண்டார் ஒருவருமே *தீயன் அவனென்றே;
காண்பார் ஒருவரிலர் காந்தும் குணத்தனென;
சின்னவன் என்றென்னைச் சீறிச் சிவந்தெழுவான்
அன்னவன் முன்னேநான் ஆர்த்துப் படர்ந்தெழுவேன்;
பாவம் அவனுடலம் பாழாய்க் கருகிவிடும்;
நாவை அடக்காதார் நைந்தழிவர் ஈதுண்மை;100
காதலால் ஒன்றுபடுங் காளையரும் கன்னியரும்
பேதமிலா நெஞ்சாற் பிணைவதுபோல், உண்மையுளங்
கொண்டிலங்கும் நட்பினர் கூறுபடலின்றிக்
கண்டுணர்ந்து நெஞ்சம் கலந்தொன்றாய்க் கூடுதல்போல்
எப்புலத்துச் சார்ந்தாலும் அப்புலத்து வண்ணம்பெற்
றிப்புவியில் வாழ்வேன் எனக்கென வண்ணமிலேன்;
பள்ளிச் சிறுவர்க்குப் பாரில் எனைப்போல


*தீயன் - நெருப்பு