202 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
எண்ணமெனக் கெங்கெங்கோ ஓடிஓடி எனதுதமிழ் நாட்டுநிலை நினைந்த தங்கே; நண்ணிஎனைத் தோள்தொட்டுக் கம்ப நாடன் நலமிக்க வேளாண்மை காண்க என்றான்.14 படியரிசித் திட்டங்கள் அங்கே யில்லை படிமுழுதும் நெல்விளைந்து கிடப்ப தாலே; குடிபுரப்போர் உழமறுப்புச் செய்ய வில்லை கொடுமைகளைக் காணாத கார ணத்தால்; இடுவரம்புச் சட்டங்கள் அங்கே இல்லை எழில்வயல்கள் உழவரிடம் இருப்ப தாலே; படுபொருளைப் பதுக்குகிற பழக்கம் இல்லை பார்முழுதும் நினைத்தவெலாம் கிடைப்ப தாலே.15 உரம்போடத் தழையறுப்பர் அன்றி மற்றோர் உயிர்போகத் தலையறுக்குந் தொழிலைச் செய்யார்; தரங்காணும் பயிரறுப்பர் அன்றி மற்றோர் தவிதவிக்க உயிரறுக்க நினையார் அங்கே; வரம்பாடும் களையெடுப்பர் அன்றி மற்றோர் வரம்புகளை எடுக்கமனம் விரும்பார் அங்கே; 1அறம்பாடுஞ் செயல்முறைகள் விளைப்ப ரன்றி 2அறம்பாடும் தீவினைகள் விளையா ரங்கே.16 பலவகைய தொழில் வளங்கள் படைத்து நிற்பார் பணிபுரியும் நிறுவனங்கள் அடைத்து நில்லார்; உலகுடனே தலைநிமிர உழைத்து நிற்பார் உண்டாக்கும் பொருள்தடுத்து வளைத்து நில்லார்; கலகமொடு கயமைசெய விருப்பங் கொள்ளார் கடமைகளைப் புரிவதற்கு வெறுப்புங் கொள்ளார்; பலதொழில்கள் புரிவினைஞர் பகைமை கொள்ளார் பாடுபடும் நிலைக்கேற்பப் பயனே கொள்வார்.17
அறம்பாடும் - 1. அறநூலிற்பாடும்; 2. வசைபாடுதல். |