பக்கம் எண் :

நெஞ்சு பொறுக்கவில்லையே69

முறைவழிப் படுஉம்’ எனவும் மொழிந்தனன்;
அதனால்
நீந்தும் முயற்சியை நீத்தனன் ஆழ்ந்தனன்;
‘பெரியோரை வியத்தலும் இலமே தம்மிற்
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’
எனுமொழி அவன்றன் ஏற்றமுங் காட்டும்;
மனத்துறு பண்புடன் மானமுங் காட்டும்.
எனினும் ஒருவரை ஏற்றிப் புகழ்ந்து
தனிநலம் ஒன்றே தகுமெனப் பேணித்
தனித்திறங் காட்டுவன்; தாழ்த்த நினைப்பின்
இவன்போற் பிறரை இகழ்வதில் பழிப்பதில்
இனிமேல் யாண்டும் எவனும் பிறவான்
தீதகல் வழியும் தேனிகர் மொழியும்
ஓதிக் கெட்டவன் இவன்போல் இலனே
உரைத்த குறிக்கோள், நடத்தும் வாழ்க்கை
இணைத்து நோக்கின் இரண்டும் தனித்தனி;
நினைதொறும் நினைதொறும் நெட்டுயி;ர்ப் புயிர்த்து
நனிபட ரெய்தி நலிவுறும் மனனே.