பக்கம் எண் :

வீரகாவியம்425

இயல் - 92

எழில்முகத்துப் பாலகன்நீ போர்தொ டுக்க
ஏன்வந்தாய்? பிழைத்துப்போ! என்றான் வேழன்.

‘பால்வழியும் எழில்முகத்துப் பால! இங்குப்
      பற்றியுனைப் பொருதுகொல மனமே யில்லை;
ஏல்வலியை நீயெனினும் சிறுவன் அன்றோ!
      யான்முதிர்ந்த பெருமறவன்; குருதி வெள்ளம்
வேல்வழியிற் பாய்ந்தோடக் களங்கள் கண்டேன்
      வெண்பூதன் மடிந்தொழியப் பொருது வென்றேன்
சால்புடைய மறவர்குல மகனே! ஈன்ற
      தாய்க்குரிய மகனாகப் பிழைத்துப் போபோ!395

நான்பெற்ற மகன்போல உனைநி னைத்தே
      நவில்கின்றேன் நயவுரைகள்; கேளென் சொல்லை;
ஏன்பெற்றாய் இந்நிலையை? நாவ லத்தான்
      ஏவலுக்கோர் ஆளாகி மடிதல் வேண்டா!
வான்பெற்ற பிறகளங்கள் புக்கு நின்றன்
      வாள்வலிமை காட்டியங்கு வென்றி கொள்க!
தேன்பெற்ற மொழியுனக்கு மனமி ரங்கிச்
செப்புகின்றேன் சென்றுபிழை! செல்வா’ என்றான்.396


ஏல் - (போருக்கு) ஏற்ற, வெண்பூதன் - மாவேழனால் கொல்லப்பட்ட பெருவீரன்.