14 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10 |
மும்முடியை ஓர் தலையில் முடித்த முடியரசர் எம்முடியும் தலைவணங்கும் இயற்கையிலே கவிஞர் தம்மரிய கவிதையினால் கவியரசர் ஆனார் தாய்த்தமிழே! அவர்முடியை உனக்குத்தான் சாய்ப்பார். - கவிஞர் கண்ணதாசன் வளையாத முடியரசன் வைரத் தூண்தான்! வளமார்ந்த பெரியாரின் கொள்கை வாள்தான்! தளையறுத்து தமிழ்ப்பகையின் தலை யறுக்கும் தளைதட்டா வெண்பாக்கள் இவரின் தோட்டா குலைஇளநீர் கொட்டியதாய் இனிமைப் பேச்சு! 'குடி'யறியாச் சிந்தனைகள்! தமிழே மூச்சு! அலைகடலாய் கருத்துமனம்! பெரியார் அண்ணா ஆழ்மனத்தில் வைத்திருந்த புதையல் காடு எவரெவரோ எழுதுகின்றார்! இவரைப் போன்றே எழுந்தவர்யார் எழுத்தாலே? பாவேந் தர்தம் தவப்புதல்வர்! தமிழ்ப்புலவர்! இவரின் பாட்டு தன்மான இயக்கத்தின் தளிர்தா லாட்டு யுகப்புரட்சி எழுத்தாளா! தமிழர் கைக்கு உயிர் நூற்கள் படைப்பாளா! உன்றன் தொண்டை அகங்குளிர நினைக்கின்றேன்! உருவம் கூட அகலவில்லை! அடடாநீ! எங்கே போனாய்? - உவமைக் கவிஞர் சுரதா கொட்டிக் கொடுத்தாலும் கோமான்கள் அழைத்தாலும் எட்டியே பார்க்காத இளம்போத்துச் சிங்கமாய் அட்டியின்றி பணத்தாசை அணுவளவும் இல்லாமல் சுட்டி உரைக்கும் சுடர்க்கவியாய் கவியுலகில் பாடிப்பறந்த பறவையாம் கவியரசர் முடியரசர். - தமிழாகரர் தெ. முருகசாமி கவிஞரின் மறைவிற்காகத் 'தினமணி' நாளிதழ் தீட்டிய அஞ்சலித் தலையங்கம் - 5.12.98 |