பக்கம் எண் :

எப்படி வளரும் தமிழ்89

"பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப்
பசுங் கொண்டலே"

எனக் குமரகுருபரரும் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழிற் கூறுகிறார். திருமழிசை யாழ்வாருடைய பாடலைக் கேட்டதும் திருமால் தமது பைந்நாகப் பாயைச் சுருட்டிக்கொண்டு ஆழ் வாருக்குப் பின்னே ஓடுகிறார். அவருக்குப் பின்னே அவர் துணைவியார் திருமகளும் தொடர்கிறார். தமிழுக்குப்பின் திருமால் ஓடக் காரணமென்ன? அத் தமிழ் தந்த இன்பமன்றோ? தமிழின்பம் ஆண்டவனை ஆட்டிப் படைக்கவல்லது; அரசரை ஆட்கொண்டு தன்வயப்படுத்த வல்லது. அடியவரை அகங் களிக்கச் செய்யவல்லது; மக்களுக்குக் களிப் பூட்டிச் சோர்வகற்றித் தென் பூட்டவல்லது.