22 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 |
சேர நாட்டு அரசர்களைப் பற்றிக் கூறுகிற பதிற்றுப்பத்துக் கும் கொங்குநாட்டு வரலாற்றுக்கும் என்ன சம்பந்தம் உண்டு என்று கேட்கலாம்; இப்போது பெரும்பான்மையோர் கருதிக் கொண்டிருக்கிறபடி, பதிற்றுப்பத்து சேர நாட்டு வரலாற்றை மட்டுங் கூறவில்லை; கொங்குநாட்டு வரலாற்றையுங் கூறுகிறது. முதல் ஆறு பத்துகள் சேர நாட்டுச் சேர அரசர்களைப் பற்றிக் கூறுகின்றன. அடுத்த நான்கு பத்துகள், கொங்கு நாட்டையாண்ட கொங்குச் சேர அரசர்களைப் பற்றிக் கூறுகின்றன. இந்த உண்மையை இது வரையில் சரித்திரக்காரர்கள் உணரவில்லை. பதிற்றுப்பத்து அரசர்களை மூத்தவழியரசர் என்றும் இளைய வழியரசர் என்றும் இருபிரிவாகப் பிரிக்கலாம் மூத்த வழியரசர்கள் சேர நாட்டை யரசாண்டார்கள். இளைய வழியரசர்கள் கொங்குநாட்டை யரசாண்டார்கள். கொங்கு நாட்டை யரசாண்ட இளையவழி யரசர் களுக்குக் கொங்குச் சேரர் என்று பெயர் கூறலாம். சங்க இலக்கியங் களில் அவர்கள் பொறையர் என்று கூறப்பட்டுள்ளனர். ஆனால், மூத்த வழிப் பரம்பரையாருக்கும் இளையவழிப் பரம்பரையாருக்கும் கொங்குநாட்டுச் சரித்திரத்தில் பெரும் பங்கு உண்டு. மூத்த வழியைச் சேர்ந்த சேர அரசர் கொங்கு நாட்டைச் சிறிது சிறிதாகக் கைப்பற்றிச் சேர சாம்ராச்சியத்தோடு (சேரப் பேரரசோடு) இணைத்துக் கொள்ள பல காலம் முயன்றனர். கொங்கு நாடு, சேர இராச்சியத்துக்கு அடங்கிய பிறகு சேர அரசர்களின் இளைய பரம்பரையார் கொங்கு நாட்டில் வந்து தங்கி கருவூரைத் தலைநகரமாக அமைத்துக்கொண்டு கொங்குச் சேரர் என்னும் பெயர் பெற்றுக் கொங்கு நாட்டை யரசாண்டார்கள். இந்த வரலாற்றை அறிவதற்குப் பெருந்துணையாக இருப்பது பதிற்றுப்பத்து. முக்கியமாக 7, 8, 9 ஆம் பத்துகள் கொங்கு நாட்டுப் பழைய வரலாற்றை அறிவதற்கு உதவியாக உள்ளன. புறநானூறு புறநானூறு சங்க காலத்திலிருந்த சேர, சோழ, பாண்டிய அரசர்கள் மேலும், சிற்றரசர்கள் மேலும் புலவர்கள் அவ்வப் போது பாடிய செய்யுள்களின் தொகுப்பு ஆகும். புறநானூற்றுச் செய்யுள்களில் சேர அரசரைப் பற்றிய செய்யுள்களும் உள்ளன. கொங்குச் சேரர்களைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் கூறப்பட்ட வரலாறுகள் சில புறநானூற்றுச் செய்யுள்களிலும் கூறப்படுகின்றன. பதிற்றுப்பத்தில் |