1. மூன்றாம் நந்திவர்மன் நந்திவர்மன் வரலாறு தெள்ளாறெறிந்த நந்திவர்மன் பல்லவ இராச்சியத்தை ஏறக் குறைய இருபத்தைந்து ஆண்டு அரசாண்டான். இவன் அரசாண்ட காலம் கி. பி. 847 முதல் 872 வரையில் என்பர். தமிழ்நாட்டுச் சரித்திரத் தில் புகழ்வாய்ந்த இந்த அரசன், பல்லவ அரசர் பரம்பரையில், நந்தி என்னும் பெயர்பெற்ற அரசர்களில் மூன்றாவன். ஆகவே இவனை மூன்றாம் நந்திவர்மன் என்று கூறுவர். பெற்றோர் இவனுடைய தந்தையின் பெயர் தந்திவர்மன் என்பது. நந்தி வர்மன் மனைவி, கடம்ப அரசர் குலத்தில் பிறந்தவளான அக்கள நிம்மதி என்பவள். இவர்களுக்கு மகனாகப் பிறந்தவன் நந்திவர்மன் மூன்றாவன். இவன் அரசாட்சிக்கு வந்தவுடன் பல பேர்களைச் செய்து வெற்றி பெற்றான். இச்செய்திகளை வேலூர்ப்பாளையத்துச் செப்பேட்டுச் சாசனம் இவ்வாறு கூறுகிறது. “வீரர்களுக்குத் தலைவனாய் உலகத்தை ஆளும் ஆற்றல் படைத்த இந்தப் பல்லவ மாகராசனுக்கு (தந்திவர்மனுக்கு), முப்புரங் களை வென்ற வீரனுக்குக் (சிவபொருமானுக்கு) கௌரி மனைவியாக வாய்த்ததுபோல, கடம்பகுல சூளாமணியான புகழ்வாய்ந்த அரசனுடைய மகளான அக்களநிம்மதி என்பவள் மனைவியாக வாய்ந்தாள்.” “ஒளியை (சூரியனை) வைகறைப்பொழுது தந்தது போலவும், வியக்கத்தக்க வேலையுடைய குமரக் கடவுளை அம்பிகை தந்தது போலவும், வெற்றிமிக்க சயந்தனைச் சசி தந்ததுபோலவும், புகழ்வாய்ந்த நந்திவர்மனை இவள் (அக்களநிம்மதி) தந்தாள்.” “இவன் (நந்திவர்மன்), தன் தோள்வலியினாலும் ஆற்றலினாலும், தன் வாளினால் கொன்ற யானைகளின் மருப்புக்களிலிருந்து வெளிப்பட்ட முத்துக்கள் நகைப்பது போலக் காணப்பட்ட போர்க்களத்திலே, தன் |