பக்கம் எண் :

192மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 5

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட இந்தச் சாசனத்தைச் சாசன இலாகா படித்து வெளியிடாமல் மறைத்து வைத்திருந்த இரகசியம் புரியவில்லை. இப்படிப்பட்ட முக்கியமான சாசனங்களை வெளியிடாமல் இருட்டில் வைத்திருக்கும் காரணம் என்ன? வெளியிடாத சாசனங்களை இனியேனும் வெளியிட்டுத் தமிழ்நாட்டு வரலாறு எழுதுவதற்குத் துணைபுரிவார்களா? இதுகாறும் தூங்கிக்கொண்டிருந்ததுபோலத் தூங்கப் போகிறார்களா?

இந்தச் சாசனத்தை முதன் முதலாக வெளியிட்ட திரு. ஐ. மகாதேவன் அவர்களுக்கு எமது நன்றி.

அடிக்குறிப்புகள்

1. page I, Corpus of the Tamil-Brahmi Inscriptions by Iravathem Mahadevan 1966.