பக்கம் எண் :

178கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10

நாவையே புகழ்ந்து போற்றி
   நல்விழா எடுப்பாள்! பாட்டுப்
பூவையே அணியும் நங்கை
   புகழுச்சி ஏற்றிப் பார்ப்பாள்;
பாவைக்கந் நாள்கி டைக்கும்
   பாவல வணக்கம் ஐயா!

ஆசிரியர்அன்பிற்கலந்த இளவல்
'காவியப்பாவை'கபிலவாணன் 28.12.74

என் உயிர்காத்த அண்ணல் சுப்பிரமணியனாரைப்பற்றிப் பாடிய பாடல்களைத் தென்றல் ஏட்டில் வெளியிட்டிருந்தேன். அப்பாடலில் மயங்கிய அன்பர் விடுத்த பாடல்களிற் சில:

புதுக்கோட்டைத் தமிழ்ப்பெரியோன் சுப்ரமண்யப்
   புரவலனின் உயர்பண்பை, ஈகைப் போக்கை
மதுக்கோப்பை யெனமயக்கும் சொற்கூட் டத்தால்
   வடித்துவிட்டாய்; செய்ந்நன்றி உன்றன் நெஞ்சில்
எதுக்களித்து நிற்கும்நிலை கண்டு கொண்டேன்
   இதயத்தை வெளித்திறந்து காட்டி விட்டாய்
புதுப்புனலின் நடைபோலக் குதிக்கும் உன்றன்
   பொற்கவிதைத் திரள்கண்டு பூரித் தேன்நான்.

தமிழ்பாடித் தமிழுக்கே பாடு பட்டுத்
   தமிழறிஞர் பலரிங்குத் தமிழர் நாட்டில்
உமியாகி மண்ணாகி மடிந்தார்; ஆனால்
   உயிர்வாட்டும் பெருந்துன்பம்உற்ற போது
தமிழாளா! உன்னுடைய துயரம் போக்கித்
   தண்ணிழலும் பேரன்பும் தந்து நின்ற
தமிழ்ப்பெரியோன் தனைப்புகழ்ந்து பாடல் சாலும்!
   தக்கவனைப் புகழ்ந்துரைத்த நீயும் சான்றாய்!

தேனி                                                                       க.அனந்தப்பன்(அமரன்)

20.1.59                                                                                           சுயராச்சிய பவனம்