பக்கம் எண் :

124மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14

மனத்தால் வகுக்கவு மெட்டாத கோயில் வருக்கமுன்னின்
றெனைத்தான் பணிகொண்ட நாதன் தென்காசி யென்றுமண்மேல்
நினைத்தா தரஞ்செய்து தங்காவல் பூண்ட நிருபர்பதந்
தனைத்தாழ்ந் திறைஞ்சித் தலைமீ தியானுந் தரித்தனனே.    4

பூந்தண் பொழில்புடை சூழுந்தென் காசியைப் பூதலத்தில்
தாங்கிளை யுடனே புரப்பார்கள் செந்தா மரையாள்
காந்தன் பராக்கிரமக் கைதவன் மான கவசன்கொற்கை
வேந்தன் பணிபவ ராகி யெந்நாளும் விளக்குவரே.    5

காண்டகு சீர்புனை தென்காசிக் கோபுரக் கற்பணியா
றாண்டில் முடித்துக் கயிலை சென்றா னகிலேசர் பதம்
பூண்டுறை சிந்தை யரிகேசரி விந்தைப் போர்கடந்த
பாண்டியன் பொன்னின் பெருமாள் பராக்கிரம பாண்டியனே.    6

ஆரா யினமிந்தத் தென்காசி மேவுபொன் னாலையத்து
வாராதோர் குற்றம் வந்தாலப் போதங்கு தந்ததனை
நேராக வேயொழித் துப்புரப் பார்களை நீதியுடன்
பாரா ரறியப் பணிந்தேன் பராக்கிரம பாண்டியனே.    7

அரிகே சரிமன் பராக்கிரம மாற னரனருளால்
வரிசேர் பொழிலணி தென்காசிக் கோயில் வகுத்துவலம்
புரிசேர் கடற்புவி போற்றவைத் தேனன்பு பூண்டிதனைத்
திரிசேர் விளக்கெனக் காப்பார்பொற் பாதமென் சென்னியதே.    8

சாத்திரம் பார்த்திங் கியான்கண்ட பூசைகள் தாம் நடாத்தி
யேத்தியவன்பால் விசுவநாதன் பொற்கோயி லென்றும்புரக்கப்
பாத்திபன் கொற்கைப் பராக்கிரம மாறன் பரிவுடனல்
கோத்திரந் தன்னி லுள்ளார்க்கு மடைக்கலங் கூறினனே.    9

மென்காசை மாமல ரன்ன மெய்யோற்கும் விரிஞ்சனுக்கும்
வன்காசு தீர்த்திடும் விச்சுவ நாதன் மகிழ்ந்திருக்கப்
பொன்காசை மெய்யென்று தொட்ட கைக்குமிப் பூதலத்துத்
தென்காசி கண்ட பெருமாள் பராக்கிரமத் தென்னவனே.    10

ஏரார் சகாத்த முந்நூற்றுட னாயிரத் தெண்பத்தஞ்சிற்
சீராரு மார்கழி சித்திரை நாளிற் சிறந்துகுற்றம்