| 150 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15 |
நோயும் போல்வர் நுகர்தற் கருமையால் வேயும் போல்வரிவ் வேனெடுங் கண்ணினார். 2 தோளும் மென்முலை யும்மல்குற் பாரமும் நாளும் நாளும் நவின்று பருகிய கேள்வன் மார்க்கும் பகைஞர்க்கு மொத்தலால் வாளும் போல்வரிவ் வேனெடுங் கண்ணினார். 3 தானத்துக் குரித்து மன்று தன்கிளைக் கீயிற் சால ஈனத்தில் உய்க்கும் நிற்கும் எச்சத்தை யிகழப் பண்ணும் மானத்தை யழிக்கும் துய்க்கின் மற்றவர்க் கடிமை யாக்கும் ஊனத்து நரகத் துய்க்கும் பிறர்பொருள் உவக்கில் வேந்தே. 4 கிளருமெரி விடமெழுதல் விழுதல்முத லாய அளவிலகு நரகில்வரு நவைபலவு மஞ்சின் உளமொழிமெய் நெறியொழுகி யுறுபொருள் சிதைக்கும் களவுவிழை வொழிதல்கட னாக்கனனி நன்றே. 5 பிளவுகெழு வெழுநரக மெரிகொளுவ லீர்தல் இளையவுடல் தடிவொடுறு துயரம்விளை விக்கும் கிளையறவு தருமரிய புகழினை யழிக்குங் களவுநனி விடுதலற மென்றுகரு தென்றான். 6 கனிந்தநெய்க் கவளங் கையில் வைத்துடன் கழறு வாரை முனிந்திடு களிறு போல்வார் முத்தியை விளக்கு நீரார் மனங்கொளத் துறந்திடாதே வால்குழைத் தெச்சிற் கோடும் சுணங்கனைப் போலும் நீரார் பற்றிடைச் சுழலும் நீரார். 7 ஆனை யூற்றின் மீன்சுவையின் அசுண மிசையின் அளிநாற்றத் தேனைப் பதங்க முருவங்கண் டிடுக்க ணெய்து மிவையெல்லாம் கான மயிலின் சாயலார் காட்டிக் கௌவை விளைத்தலான் மான மாந்தர் எவன்கொலோ வரையா தவரை வைப்பதே. 8 விண்ணில் இன்பமும் வீதல் கேட்டுமால் மண்ணில் இன்பமும் மாய்தல் காண்டுமால் |