| 224 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15 |
என்னென் சொல்லும் பிறவு மென்றிவற் னுன்னவும் பெறூஉ நிலைமண் டிலமே.’ 45 என்றார் அவிநயனார்.” “ஈற்றதன் மேலடி யொருசீர் குறையடி நிற்பது நேரிசை யாசிரி யம்மே. 46 இடைபல குறைவ திணைக்குற ளாகும். 47 கொண்ட வடிமுத லாயொத் திறுவது மண்டில மொத்திறி னிலைமண் டிலமே. 48 ஒத்த வடித்தா யுலையா மண்டிலம் என்னென் கிளவியை யீறா கப்பெறும் அன்ன பிறவுமந் நிலைமண் டிலமே. 49 நாற்சீ ரடிநான் ககத்தொடை நடந்தவும் ஐஞ்சீ ரடிநடந் துறழடி குறைந்தவும் அறுசீ ரெழுசீர் வலிய நடந்தவும் எண்சீர் நாலடி யீற்றடி குறைந்தும் தன்சீர்ப் பாதியி னடிமுடி வுடைத்தாய் அந்தத் தொடையிவை யடியா நடப்பிற் குறையா வுறுப்பினது துறையெனப் படுமே. 50 அறுசீ ரெழுசீ ரடிமிக நின்றவும் குறைவி னான்கடி விருத்த மாகும். 51 ஆய்ந்த வுறுப்பி னகவுத லின்றி யேந்திய துள்ள லிசையது கலியே. 52 ஒத்தா ழிசைக்கலி வெண்கலிகொச் சகமென முத்திறத் தான்வருங் கலிப்பா வென்ப. 53 விட்டிசை முதற்பாத் தரவடி யொத்தாங் கொட்டிய மூன்றிடைத் தாழிசை யதன்பின் மிக்கதோர் சொல்லாத் தனிநிலை சுரிதகம் ஆசிரி யத்தொடு வெள்ளை யறுதலென் றோதின ரொத்தா ழிசைக்கலிக் குறுப்பே. 54 |