| மறைந்துபோன தமிழ் நூல்கள் | 243 |
வருவன வாசிரிய மில்லென மொழிப வஞ்சியு மப்பா வழக்கின வாகும். 26 நான்கா மடியினும் மூன்றாந் தொடையினும் தாழ்ந்த கலிப்பாத் தழுவுத லிலவே. 27 உரைப்போர் குறிப்பினை யன்றிப் பெருமை வரைத்தித் துணையென வைத்துரை யில்லென் றுரைத்தனர் மாதோ வுணர்ந்திசி னோரே. 28 தொடையெனப் படுவ தடைவகை தெரியி னெழுத்தொடு சொற்பொரு ளென்றிவை மூன்றி னிரல்பட வந்த நெறிமைத் தாகி யடியோ டடியிடை யாப்புற நிற்கு முடிவின தென்ப முழுதுணர்ந் தோரே. 29 மொழியினும் பொருளினு முரணத் தொடுப்பி னிரணத் தொடையென் றெய்தும் பெயரே. 30 செம்பகை யல்லா மரபினதாந் தம்மு ளொன்றா நிலையது செந்தொடை யாகும். 31 தொடையடி யுட்பல வந்தா லெழுவா யுடைய தனாற்பெய ரொட்டப் படுமே. 32 வெண்பா விருத்தந் துறையொடு தாழிசை யென்றிம் முறையி னெண்ணிய மும்மையுந் தத்தம் பெயராற் றழுவும் பெயரே. 33 சிறந்துயர் செப்ப விசையன வாகி யறைந்த வுறுப்பி னகற லின்றி விளங்கக் கிடப்பது வெண்பா வாகும். 34 சிந்தடி யானே யிறுதலு மவ்வடி அந்த மசைச்சீர் வருதலும் யாப்புற வந்தது வெள்ளை வழக்கிய றானே. 35 தொடையொன் றடியிரண் டாகி வருமேற் குறளின் பெயர்க்கொடை கொள்ளப் படுமே. 36 |