பக்கம் எண் :

260மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15

“ஆசிரியம் வெண்பாக் கலித்துறை முப்ப
தாகி வருவது மும்மணிக் கோவை.”     4

“வெள்ளை கலித்துறை யாசிரிய விருத்தம்
புல்லு முப்பது மும்மணி மாலை.”     5

“வெண்பா வாசிரியம் விருத்தம் கலித்துறை
யொண்பா நான்குநான்மணி மாலை.”     6

(நவநீதம், 35ஆம் செய்யுளுரை மேற்கோள்)

“மன்ன ரேவல் பெற்ற மாந்தர்க்குத்
தொண்ணூ றெழுபது சொல்லில் வரையார்.”     7

“ஆங்கவை,
யினமுறை யொன்றுமூன் றைந்தேழு முப்ப
தோங்கிய வெண்பாச் சின்னப் பூவே.”     8

(நவநீதம், 39ஆம் செய்யுளுரை மேற்கோள்)

“தானை பெற்ற தலைமை யோரையும்
ஏனைமுன் னோரைச் செற்றன ராகத்
தானினி துரைப்பினுந் தாழா தாகும்.”     9

(நவநீதம், 40ஆம் செய்யுளுரை மேற்கோள்)

“கைக்கிளை தானே கருதும் விருத்தம்
ஐந்து மூன்று மாகவும் பெறுமே.”     10

(நவநீதம், 41ஆம் செய்யுளுரை மேற்கோள்)

“இசையினுட் பாக்க ளியலா வாயின்
இசைத லின்றென வுரைக்கவும் படுமே.”     11

(நவநீதம், 66ஆம் செய்யுளுரை மேற்கோள்)

“சாதி நோக்கியுந் தன்மை நோக்கியும்
வாத மழித்துரை யுரைப்போன் வாது
வென்ற நிலையினுஞ்
சென்றிடி லரைசின் சிறப்புச் சிதைவே.”     12

(நவநீதம், 91ஆம் செய்யுளுரை மேற்கோள்)