பக்கம் எண் :

28மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15

கொங்கை யரும்பாக் குழலளகம் வண்டாக
அங்கை தளிரா வலர்விழியாத் - திங்கள்
குளிருந் தரளக் குடைக் கண்டன் கொல்லி
யொளிதருங் கொம்பொன் றளது.      1

குழைமுகத்தாற் கொங்கை மலையு மருங்கால்
விழியரிய நாட்டத்தால் வேனற்-பொழிலெல்லாம்
புல்லார்ப் புறங்கண்ட கண்டன் புகாரனைய
நல்லாளே யாகு நமக்கு.      2

கண்டு நிலைதளர்ந்தேன் காத்தருளுங் கார்வரைமேற்
புண்டரிகம் வைத்தான் புகாரனையீர்-வண்டின்
கிளையலம்பு கார்நீழற் கெண்டைமேல் வைத்த
வளையலம்பு செந்தா மரை.      3

சீத விரைக்களபச் செந்தா மரைப்பொகுட்டு
மாதனையீ ரம்போடு வந்ததோ-சோதிப்
பொருதாரை வேற்கண்டன் பூபால தீபன்
கருதாரி னிங்கோர் களிறு.      4

குருகு பெடையென்று கோலப் பணிலத்
தருகணையும் பூங்காவிற் றாகு-முருகவிழும்
பூந்தண்டார்க் கண்டன் புனனாட் டுயர்செல்வ
யாந்தண்டா வாழு மிடம்.      5

போகக் கடவன புள்ளென் றிருந்திலம் போந்துதுணை
யாகக் கடவன வென்றிருந் தேமகி லாண்டமெல்லாந்
தியாகக் கொடிகொண்ட கண்டன் புகாரிற்றஞ் சேக்கைதொறு
மேகத் தொடங்கின வேயந்தி வாயெம்மை யிட்டுவைத்தே.      6

ஊச றொழிலிழக்கு மொப்பு மயிலிழக்கும்
வாசந் தனையிழக்கும் வள்ளலே-தேசு
பொழிலிழக்கும் நாளையே பூங்குழலி நீங்க
எழிலிழக்கு மந்தோ விதண்.      7

பொன்னிதழிற் பைந்தாதும் போதும் புறம்புதைத்த
வின்னறல்போ லேழை யிருங்கூந்தல்-பொன்னணியுந்
தேன்சூழுந் தார்க்கண்டன் றெவ்விற் றிகைத்தன்ப
யான்சூழ வுண்டோ வினி.      8