பக்கம் எண் :

48மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15

27. பொருளியல்

அகப்பொருளைக் கூறும் இந்நூற் செய்யுள்கள் களவியற் காரிகை யுரையாசிரியரால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இந்நூலை இயற்றிய ஆசிரியர் பெயர் முதலியன தெரியவில்லை. இந்நூற் செய்யுள்கள் சிலவற்றைக் கீழே தருகிறோம்:

நோக்கினும் பிறர்முக நோக்காள் சாரினும்
பூக்குழன் மடந்தை தோள்சா ரும்மே
யன்ன தலையளி யுடைமையி
னின்னுயிர்த் தோழி யேந்திழை யிவட்கே.      1

உடையை வாழி நெஞ்சே யிடைக்கொண்
டழுங்க லோம்புமதி தழங்கொலி மிகுநீர்
வழுத்தூர் காக்கு மாபுணை
விழுத்துணைக் கான்ற மிகுபெருங் கிளையே.      2

பொருந்தா தம்ம புனையிழை மடந்தை
முருந்தேர் முறுவ னோக்கிள்
வருந்தின னென்பது பெருந்தகை பெரிதே,     3

ஆய்தளிர் பொதுளிய வீததை
காய்கதிர் நுழையாக் கடிபொழில்
யாவயி னோரும் விழைவுறுந் தகைத்தே.      4

தனிமை நெஞ்சத்து முனிவுகண் டகற்றலின்
வினைமாண் பாவை யன்ன
புனையிழை மாதரும் போன்றதிப் பொழிலே.      5

தெய்வ மாக வையுறு நெஞ்சம்
பொய்யா தாயினின் செவ்வாய் திறந்து
கிளிபுரை கிளவியாம் பெறுக
வொளியிழை மடந்தை யுயிர்பெயர்ப் பரிதே.      6

காவியங் கருங்கட் செவ்வாய்ப் பைந்தொடி
பூவிரிந் தன்ன கூந்தலும்
வேய்புரை தோளு மணங்குமா லெம்மே.      7