| தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு | 299 |
தண்ணளி யிராம சாமிக் குரிசில் தன்னுடை யரும்பெறற் றமய னாகிய 40 தழைபுகழ் வீராச் சாமி மகிபன் உஞற்றிய தவத்தா லுதயஞ் செய்த தேவ ராசச் செவ்வே ளென்பான் நற்குணம் பொறுமை ஞான வொழுக்கங் குறையா தமைந்த நிறைவு பூண்டு 45 தொல்காப் பியமுதற் றோன்றிலக் கணமு முன்னுமைங் காப்பிய முதலிலக் கியமும் பற்பல சமய ரற்புறு நூலும் மற்றுள கலைகளுங் கற்றினி துணர்ந்து மிகுவட நூலுளும் வேண்டிய தெரிந்து 50 சோதிட நூலுந் துரிசற வோர்ந்து பிறங்குறு மறிவிற் பெரியோ னாகி வண்புகழ்க் குசேல மாதவன் சரிதையைத் தமிழிற் பாடத் தானஃ தறிந்து தன்னவைக் களத்து மன்னுற வழைத்துத் 55 தொக்கள வில்லார் சூழ விருப்ப விரித்துரைக் கென்று விருப்பிற் கேட்டுக் கவிதொறுங் கிடக்குங் கற்பனை வியப்புஞ் சொல்லுடை மாண்புந் தொகுபொருள் மாண்பும் மற்றுள சிறப்பும் வகைப்பட வாராய்ந் 60 தற்புத மற்புத மென்றக மகிழ்ந்து விரிகடல் சூழ்புவி விளங்கப் பரிவுட னச்சிற் பதிப்பித் தனனே. ஏராருஞ் சகாத்தமா யிரத்தெழு நூற் றெழுபத்திரண்டி னிகழ்சௌமிய நல்லாண்டு தனுத் திங்கள் வாராருங் மிருபத்து நான்காநாள் பரிதிவார றிதிசோதி சிங்கவிலக் கினத்திற் பேராருங் குசேலமுனி தனதுசரித் திரத்தைப் தருந்தமிழி னியல்செறியப் பாடித் தாராரும் புயத்தேவ ராசவள்ள லான் றோர்தழைத் துவகைபூப்ப அரங்கேற் றினனுண் மகிழ்ந்தே. |