| பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் | 125 |
| | | (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) | | நட: | | (தனதுள்) | | | 55 | ஐயோ! இதுவென்! கட்டம்! கட்டம்! | | | | (ஆசிரியத்துறை) | | நற்: | | நாணிக் கவிழ்ந்தவள் தன்றலைதொட்டு நவின்றவுன்றன் ஆணைக் கவள்சிரம் அற்றினி வீழினு மஞ்சிலம்யாம். காணப் பிறர் பொருள் கள்ளல மாதலினால் வாணிக்குரித்தெனக்கேட்டபின்வௌவலம்வாரலையோ. 2 | | | | (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) | | நட: | | (தனதுள்) நாராயணன் அன் றுரைத்தது மெய்யே! | | | | (ஆசிரியத்துறை) | | நற்: | | நாணமி லாமகள் சாவுக் கினிவெகு நாள் களில்லை காணிய நீயும் விரும்பலை யோலையிற் கண்டுகொள்வை. பேணிய நின்வாழ் வேபெரி தாதலினால் வாணி யொளித்துநீ வாசித் தறிந்துகொள் வாரலையோ. 3 | | | | (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) | | நட: | | (தனதுள்) ஆயினும் இத்தனை பாதகனோ இவன்! |
கட்டம் - கஷ்டம். அவள் தன் தலைதொட்டு - அவளுடைய தலையை உன் கையினால் தொட்டு. நவின்ற - சொன்ன. கள்ளலம் - களவு செய்யமாட்டோம். வௌவலம் - பற்றிக் கொள்ள மாட்டோம். காணிய - காண, பார்க்க. விரும்பலை - விரும்பவில்லை. (ஆசிரியத்துறைச் செய்யுள்கள் மூன்றும், தன் மகளுடன் பலதேவன் களவொழுக்கம் கொண்டிருந்து, இப்போது அவன் வாணியை மணம் செய்யப்போகும் வதந்தியைக் கேட்ட ஒரு தாயின் கூற்று.) |