பக்கம் எண் :

138மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 18

வெஞ்சினங் குறைந்து நீங்க
      விழுத்தவந் தொடங்கி நோற்கும்
வஞ்சமில் கொள்கை யாற்குப்
      பாவம்வந் தடைந்த தாகக்

குஞ்சர முழங்கு தீயில்
      கொள்கையின் மெலிந்திம் மூதூர்
மஞ்சுதோய் குன்ற மன்ன
      மாடவீட் டகம்புகுந் தேன்.

(குஞ்சரம் முழங்கு தீ - யானைத்தீ நோய்)

பூத்தின்று புகன்று சேதாப்
      புணர்முலை பொழிந்த தீம்பால்
நீத்தறச் செல்ல வேவித்து?
      அட்டஇன் னமிர்தம் உண்பான்
பாத்தரும் பசும்பொற் றாலம்
      பரப்பிய பைம்பொற் பூமி
ஏத்தருந் தவிசில் நம்பி
      தோழரோ டேறி னானே.

(நம்பி - சீவகன்)

புடையிரு குழையும் மின்னப்
      பூந்துகில் செறிந்த அல்குல்
நடையறி மகளிர் ஏந்த
      நல்லமிர் துண்ணும் போழ்தில்
இடைகழி நின்ற என்னை
      நோக்கிப்போந் தேறு கென்றான்
கடல்கெழு பரிதி யன்ன
      பொற்கலத் தெனக்கும் இட்டார்.

கைகவி நறுநெய் பெய்து
      கன்னலங் குடங்கள் கூட்டிப்
பெய்பெய்என் றுரைப்ப யானும்
      பெருங்கடல் வெள்ளிக் குன்றம்.