பக்கம் எண் :

58மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 19

காபாலி:சிவபெருமான் திருவருளால் நான் மீண்டும் காபாலி ஆனேன். (மண்டையோட்டை எடுத்துக் கொள் கிறான்.)
பைத்திய:தேவடியாள் மகனே, விஷத்தைக் குடியேன். (மண்டையோட்டைப் பிடுங்கிக் கொண்டு போகிறான்)
காபாலி:(அவனைத் தொடர்ந்து சென்று) இந்த யமதூதன் என்னுடைய உயிரைக் கொண்டு போகிறான். ஐயா, எனக்கு உதவி செய்யுங்கள்.
பிக்குவும் பாசுபதனும்:அப்படியே உதவி செய்கிறோம். (எல்லோரும் பைத்தியக்காரனை மறித்துக் கொள்ளுகிறார்கள்)
காபாலி:ஏ! நில்லு, நில்லு.
பைத்திய:என்னை ஏன் வழி மறிக்கிறாங்கோ.
காபாலி:என்னுடைய கபால பாத்திரத்தைக் கொடுத்து விட்டுப் போ.
பைத்திய:முட்டாள்! இது தங்கப் பாத்திரம் இன்னு தெரியலையா, உனக்கு?
காபாலி:இது தங்கப் பாத்திரம் என்றால், இதை யார் செய்தார்கள்?
பைத்திய:அதைச் சொல்லட்டுமா? பொன் நிறமான போர்வையைப் போர்த்துக்கிட்டு இருக்கானே, அந்தத் தட்டான்; அவன் தான் இதைச் செய்தான். இது பொன் கிண்ணம்.
பௌ. பிக்கு:என்ன சொல்லுகிறாய்!
பைத்திய:இது பொன் கிண்ணம்; தங்கக் கிண்ணம்.
பௌ. பிக்கு:இவன் என்ன, பைத்தியக்காரனா?
பைத்திய:அடிக்கடி பைத்தியக்காரன், பைத்தியக்காரன் இன்னு சொல்லுறாங்கோ. இதைப் பிடிச்சுக்கோ! அந்தப் பைத்தியக்காரனை எனக்குக் காட்டு. (காபாலிகனிடம் மண்டையோட்டைக் கொடுக்கிறான்.)