| 124 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 |
| | | கூச்சங் காட்டுமிக் குருகுகா தலியே. ஆடவர் காத லறை தலுந் தையலர் கூடமாய்க் கொள்ளலும் இயல்பே போலும்! | | | 40 | வாணீ! மங்காய்! வாழி நின்குணம்! ஒருதினம் இவ்வயின் உனையான் கண்டுழி முருகவிழ் குவளைநின் மொய்குழற் சூட்டத் தந்ததை யன்பாய் மந்தகா சத்தொடு. வாங்கியும்; மதியா தவள்போ லாங்கே | | | 45 | ஓடுமவ் வாய்க்கால் நீரிடை விடுத்துச் சிறுமியர் குறும்பு காட்டிச் சிரித்தனை. ஏதியா னெண்ணுவ னோவென வுடன் நீ கலங்கிய கலக்கமென் கண்ணுள தின்றும். அழுங்கலை வாணீ! அறிவேன்! அறிவேன்! | | | 50 | உளத்தோ டுளஞ்சென் றொன்றிடிற் பின்னர் வியர்த்தமே செய்கையும் மொழியும் - “வாணி” என்றபேர் கேட்டனன்! யாரது? | | | (உற்றுச் செவிகொடுத்து) | | | காணின் நன்றாம். காரிகை யார்கொல்?> | (பலதேவனும், ஒரு நற்றாயும், தோழனும் தொலைவில் வர) சொல்வதென்! சூழ்ச்சியென்! கேட்குதும் மறைந்து. (ஆசிரியத்துறை) நற்றாய்: | | | | நாணமு மென்மகள் நன்னல மும்முகுத் துன்னை நம்பி வீணில் விழைந்தஇக் கேடவள் தன்னுடன் வீவுறுமே. பேணிய என்குடிப் பேர்பெரி தாதலினால் வாணியின் வம்புரை யாமினி யஞ்சுதும் வாரலையோ. 1 |
கூடமாய் - மறைவாய். இவ்வயின் - இவ்விடத்தில். கண்டுழி - பார்த்த போது. முருகு - மணம், அழகு. மந்தகாசத்தொடு - புன்முறுவலோடு. அழுங் கலை-வருந்தாதே. வியர்த்தம் - வீண். யார்கொல் - யாரோ? உகுத்து - உதிர்த்து, சிந்தி. விழைந்த - விரும்பிய. வீவுறும் - கெடும். வம்புரை - வீண் பேச்சு. அஞ்சுதும் - அஞ்சுகிறோம். வாரலையோ - வரமாட்டாயா. |