| பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் | 131 |
| | | பெற்றவா றன்றோ? எற்றே மடமை! கேட்டிட வேட்டவை யாவையும் ஈயுங் கற்பக தருவென அற்பமுங் கருதாது | | | 170 | அடியுடன் முறித்து முடிபுற வெரித்துக் கரிபெற முயன்ற கம்மிய னேயென, தனக்கென வாழுந் தனிமிரு கத்தின் மனக்கோள் நிமிர்த்து மற்றைய ரின்பமுந் துன்பமுந் தனதா அன்புபா ராட்ட, | | | 175 | மெள்ளமெள் ளத்தன் உள்ளம் விரித்துப் பொறையுஞ் சாந்தியும் படிப்படி புகட்டிச் சிறிது சிறிதுதன் சித்தந் தெளித்துத் தானெனு நினைப்புந் தனக்கெனு மிச்சையும் ஓய்வுறச் செய்து மற் றென்றாய் நின்ற | | | 180 | எங்கு நிறைந்தபே ரின்ப வெள்ளம் முங்கி யதனுள் மூழ்கிட யாரையும் பக்குவஞ் செய்யுநற் பள்ளிச் சாலை, இவ் இல்லற மென்பதோர் நல்லுணர் வின்றி, உடல்தின வடக்குமா உரைஞ்சிடு தடியென |
உளதேல் - இருக்குமானால். நாற்றம் - மணம், வாசனை. எற்றே- என்னே. வேட்டவை - விரும்பியவை. கற்பக தரு - கற்பகமரம். இது தேவலோகத்தில் இருப்பது. இம்மரத்தின் கீழிருந்து வேண்டிய பொருளை நினைத்தால் அதனைத் தருவது. வரி: 168 - 171. நினைத்ததைக் கொடுக்கும் கற்பகமரத்தைக் கரிக்காக வெட்டிய கொல்லனைப்போல. மனக்கோள் - மனத்தின் கோணல். உள்ளம் விரித்து - மனத்தை அன்பினால் விரிவுபடுத்தி. பொறை - பொறுமை. சாந்தி - அமைதி. ஓய்வுற - ஓயும்படியாக. முங்கி - முழுகி. மலையாள நாட்டு வழக்கு. உடல் தினவு அடக்கும் - உடம்பின் தினவை நீக்கும். மா உரைஞ்சிடு தடி - மிருகங்கள் தினவு தீர உராய்ந்துகொள்ளும் மரக்கட்டை. |