206 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 |
| | தங்குவ தனைத்தும் அவனருட் சார்பில் அண்டகோ டிகளிங் கொன்றோ டொன்று | | 155 | விண்டிடா வண்ணம் வீக்கிய பாசம், அறியில் அருளலாற் பிறிதெதுஆ கருஷணம்? ஒன்றோ டொன்றியாப் புற்றுயர் அன்பில் நின்றஇவ் வுலகம், நிகழ்த்திய கருணை பயிற்றிடு பள்ளியே அன்றிப் பயனறக் | | 160 | குயிற்றிய பொல்லாக் கொடியயந் திரமோ? பாரும்! பாரும்! நீரே கூறிய சிலந்தியின் பரிவே இலங்கிடு முறைமை! பூரிய உயிரிஃ தாயினும், தனது சீரிய வலையிற் சிக்குண் டிறந்த | | 165 | ஈயினை ஈதோ இனியதன் குஞ்சுகள் ஆயிரம் அருந்த அருகிருந் தூட்டி மிக்கநல் அன்பெனும் விரிந்தநூல் தெளிய அக்கரம் பயில்வ ததிசயம்! அதிசயம்! இப்படி முதற்படி. இதுமுத லாநம் | | 170 | ஒப்பறும் யாக்கையாம் உயர்படி வரையும் கற்பதிங் கிந்நூற் கருத்தே. அதனால் இத்தனி உலகில் எத்துயர் காணினும் அத்தனை துயரும், நம் அழுக்கெலாம் எரித்துச் சுத்தநற் சுவர்ணமாச் சோதித் தெடுக்க | | 175 | வைத்தஅக் கினியென மதித்தலே, உயிர்கட்கு உத்தம பக்தியென் றுள்ளுவர். ஒருகால் காரண காரியம் காண்குவம் அல்லேம். |
விண்டிடா - பிண்டுபோகாது. வீக்கிய - கட்டிய. பாசம் - கயிறு. ஆகருஷ்ணம் - இழுக்கும் சக்தி. யாப்புஉற்று - கட்டுண்டு. பயிற்றிடு - பயிற்சி அளிக்கின்ற. குயிற்றிய - செய்த. பூரிய - எளிய. அக்கரம் - அட்சரம், எழுத்து. வரி 174 - 175. பொன்னை நெருப்பில் இட்டுப் புடம் போட்டால் அதன் அழுக்கை நீக்கிப் பிரகாசிக்கச் செய்கிற நெருப்பு என்பது கருத்து. உள்ளுவர் -நினைப்பார்கள். |