| | எடுத்தெறிந் திடுவனிப் போதே நம்மொழி. அடுத்தநம் படைஞரோ பகைவர்; அவர்நமைக் கெடுத்தநா ரணற்கே கேளொடு கிளைஞர், ஆதலின் இஃதே தீதறு முறுதி ... |
| 20 | என்னைநம் ஊகம்! என்னைநம் ஊக்கம்! முன்னர்யாம் அறியா இன்னநற் சுருங்கையில் துன்னிருள் வழிதனி தொடர்ந்திவண் சேர்ந்தோம். ஊக்கமே பாக்கியம். உணர்விலார் வேறு பாக்கியம் ஊழெனப் பகர்வதெல் லாம்பாழ். |
| 25 | சாக்கியம் வேறென்? சாத்தியா சாத்தியம் அறிகுறி பலவால் ஆய்ந்தறிந் தாற்றும் திறமுள ஊகமே யோகம்; அன்றி |
| | (நட்சத்திரங்களை நோக்கி) |
| | வான்கா டதனில் வறிதே சுழலும் மீன்காள்! வேறும் உளதோ விளம்பீர்? |
| 30 | மதியிலா மாக்கள் விதியென நும்மேற் சுமத்தும் சுமையும் தூற்றும் சும்மையும் உமக்கிடு பெயரும் உருவமும் தொழிலும் அமைக்கும் குணமும் அதில்வரு வாதமும். யுக்தியும் ஊகமும் பக்தியும் பகைமையும். |
| 35 | ஒன்றையும் நீவிர் உணரீர்! அஃதென்? வென்றவர் பாசறை விளங்குவ தஃதோ! இங்குமற் றுலாவுவன் யாவன்? பொங்குகால் வருந்தொறும் சிலமொழி வருவ.அஃதோ திரும்பினன் ! ஒதுங்குவம். தெரிந்துமேற் செல்குவம்.(புருடோத்தமன் தனியா யுலாவி வர) |
சாத்தியாசாத்தியம்- முடிவதும் முடியாததும். யோகம் - அதிர்ஷ்டம். வான்காடு - வானமாகிய காடு. மீன் - விண் மீன். சும்மை - ஒலி.