| புரு: | | அவ்வழி யோநீ யணைந்தனை? |
| குடி: | | ஆம்! ஆம்! செவ்விதி னொருமொழி செப்பிடி லுடனே காட்டுவ னடியேன். |
| | | (அருள்வரதனுஞ் சேவகரும் விலங்கு கொண்டுவர) |
| புரு: | | (குடிலனைச் சுட்டி) பூட்டுமின்! நன்றாய்! |
| குடி: | | ஐயோ! ஐயோ! ஓஹோ! செய்ததென்? |
| | 160 | மெய்யே முற்றும். பொய்யிலை! பொய்யிலை! |
| | | (அருள்வரதன் விலங்கு பூட்ட) |
| புரு: | | எத்திசை யுளதச் சுருங்கை? ஏகாய்! சித்திர வதையே செய்வேன் பிழைப்பில்! |
| குடி: | | (அழுது) |
| | | தேடியே வந்து செப்பிய வடியேன் ஓடியோ போவேன்? ஓஹோ! உறுதி |
| | 165 | முந்தியே தந்திடில்... |
| புரு: | | மூடுநின் பாழ்வாய்! சேரன் விஜயமுந் திருடான்! அறிகுதி. |
| | | (சேவகரை நோக்கி) | |
| | | சூரர் பதின்மர் சூழுக விருபுறம்! |
| | | (குடிலனை நோக்கி) |
| | | நடவா யுயிர்நீ நச்சிடில். கெடுவாய்! எத்திறம் பிழைப்பினுஞ் சித்திர வதையே! |
| | | (யாவரும் சுருங்கை நோக்கிப் போக) |
பிழைப்பில் - தவறு செய்தால். உறுதி - பாண்டிய நாட்டுக்கு அரசனாக்குவேன் என்னும் உறுதிமொழி. விஜயம் - வெற்றி நச்சிடில் - விரும்பினால்.