எழுதாக்கேள்வி முதல் - எள்ளோரை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
எழுமுனிவர் இருடிகள் எழுவர் ; அகத்தியன் , புலத்தியன் , அங்கிரசு , கௌதமன் , வசிட்டன் , காசிபன் , மார்க்கண்டன் , எனப் பிங்கல நிகண்டு கூறும் ; வடமொழி நூல்களுள் அத்திரி , பிருகு , குச்சன் , வசிட்டன் , கௌதமன் , காசிபன் , அங்கிரசு என்றும் மரீசி , அத்திரி , அங்கிரசு , புலத்தியன் , புலகன் , சிரது , வசிட்டன் என்றும் வெவ்வேறாக உரைப்பர் .
எழுமை உயர்ச்சி ; ஏழ்வகை ; ஏழுவகைப் பிறப்பு ; ஏழுமுறை பிறக்கும் பிறப்பு .
எழுவகை அளவை நிறுத்தளத்தல் ,பெய்தளத்தல் , சார்த்தியளத்தல் , நீட்டியளத்தல் , தெறித்தளத்தல் , தேங்க முகந்தளத்தல் , எண்ணியளத்தல் என்பன .
எழுவகைத் தாது உடம்பில் உள்ள எழுவகைப் பொருள்கள் ; இரதம் , குருதி , எலும்பு , தோல் , இறைச்சி , மூளை , சுக்கிலம் .
எழுவகை நதி ஏழு புண்ணிய ஆறுகள் ; கங்கை , குமரி , யமுனை , நருமதை , காவிரி , சரசுவதி , கோதாவரி .
எழுவகைப் பிறப்பு காண்க : எழுபிறப்பு .
எழுவகைப் பெண்பருவம் பெண்களின் வளர்சசியில் உள்ள ஏழு நிலைகள் ; பேதை , பெதும்பை , மங்கை , மடந்தை , அரிவை , தெரிவை , பேரிளம்பெண் . இவற்றின் அகவை முறையை 7 ,11 ,13 ,19 ,25 ,31 ,40 ஆகும் .
எழுவகை மேகம் சம்வர்த்தம் , ஆவர்த்தம் , துரோணம் , புட்கலாவர்த்தம் , காளமுகி , சங்காரித்தம் , நீலவருணம் என்பன . இவை பொழிவன முறையே மணி , நீர் , பொன் , பூ , மண் , கல் , தீ .
எழுவரைக் கூடி ஒருவகைப் பாடாணம் , சவ்வீரம் என்னும் நஞ்சு .
எழுவாய் தொடக்கம் , உற்பத்தி ; முதல் ; முதல் வேற்றுமை ; கருத்தா .
எழுவாய் வேற்றுமை முதலாம் வேற்றுமை , பெயர் வேற்றுமை , பெயர் தோன்றிய துணையால் உருபும் விளியும் ஏலாது பிறிதொன்றனொடு தொகாது நிற்கும் நிலைமை .
எழுவாயெழுஞ்சனி மகநாள் .
எழுவான் கிழக்குத் திசை .
எழுவுதல் எழுப்புதல் , எழச்செய்தல் ; ஓசையுண்டாக்குதல் .
எள் ஒருவகைச் செடி , ஒரு தவசம் ; ஒரு சிறிய அளவு ; நிந்தை .
எள் (வி) எள்என் ஏவல் , நிந்தி , இகழ் .
எள்குதல் இகழ்தல் , அஞ்சுதல் ; ஏய்த்தல் ; கூசுதல் ; வருந்துதல் .
எள்ள ஓர் உவமவுருபு .
எள்ளல் இகழ்தல் ; நிந்தித்தல் ; இழிவாகப் பேசல் ; தள்ளல் ; சிரித்தல் .
எள்ளளவும் சிறிதளவும் .
எள்ளற்பாடு இகழ்ச்சி , நிந்தை , நகைப்பு .
எள்ளிடை எள்ளளவு .
எள்ளு எள் .
எள்ளுக்கடை எள்ளுத்தாள் .
எள்ளுச்செவி ஒரு பூண்டுவகை .
எள்ளுண்டை எள்ளுருண்டை , எள்ளும் வெல்லமும் கலந்து செய்யப்படும் சிற்றுண்டி .
எள்ளுதல் இகழ்தல் , இழிவாகப் பேசுதல் ; தள்ளுதல் ; ஒப்பாதல் .
எள்ளுநர் இகழ்பவர் .
எள்ளுப்பிண்ணாக்கு எண்ணெய் ஆட்டி எடுத்த எள்ளின் சக்கை .
எள்ளுருண்டை காண்க : எள்ளுண்டை .
எள்ளுரை இகழ்ச்சியுரை .
எள்ளோரை எள்ளுச்சோறு , எள்ளோதனம் .
எழுந்தருளுதல் வருதல் ; புறப்படுதல் ; தோன்றல் ; சிலை முதலியவற்றினிடமாகத் தெய்வம் வெளிப்படுதல் .
எழுந்தருளுந்திருமேனி உற்சவமூர்த்தி , திருவிழாவில் எழுந்தருளப் பண்ணும் தெய்வத் திருமேனி .
எழுந்தருளுநாயகர் உற்சவமூர்த்தி , திருவிழாவில் எழுந்தருளப் பண்ணும் தெய்வத் திருமேனி .
எழுந்திருத்தல் எழுதல் ; இருக்கையை விட்டு எழுதல் ; எழுந்து பின் இருத்தல் .
எழுந்திருப்பு எழும்புதல் ; எழுந்து நிற்கை .
எழுந்தேற்றம் இறுமாப்பு ; துணிவு ; எழுந்தமானம் ; கவனிப்பின்மை ; பெருமை ; விழாவில் சாமி புறப்பாடு .
எழுநகரம் சிறப்புடைய ஏழு புண்ணிய நகரங்கள் ; அயோத்தி , மதுரை , மாயை , காசி , காஞ்சி , அவந்தி , துவாரகை .
எழுநயம் சமணர் கூறும் எழுவகை வாதமுறை , இதனை வடமொழியில் சப்தபங்கி நியாயம் என்பர் .
எழுநரகம் எழுவகையான நரகங்கள் ; அள்ளல் , இரௌரவம் , கும்பிபாகம் , கூடசாலம் , செந்துத் தானம் , பூதி , மாபூதி , (சமணர் கருத்துப்படி) பெருங்களிற்று வட்டம் , பெருமணல் வட்டம் , எரிபரல் வட்டம் ; அரிபடை வட்டம் ; புகை வட்டம் ; பெருங்கீழ் வட்டம் , இருள் வட்டம் என்பன .
எழுநா ஏழு நாக்கு ; ஏழு நாவையுடையதாகிய அக்கினி , நெருப்பு ; கொடிவேலி .
எழுநாயிறு காண்க : எழுஞாயிறு .
எழுநிலைக்கோபுரம் ஏழடுக்குக் கட்டடமாய் ஒன்றன்மேல் ஒன்றாய் அமைக்கப்பட்ட கோபுரம் .
எழுநிலைமாடம் ஏழடுக்கு மாளிகை .
எழுப்பம் எழும்புகை , எழுகை , உயர்வு ; கிளர்ச்சி .
எழுப்பு (வி) துயிலெழுப்பு ; தூக்கு ; உயிரோடெழுப்பு ; சண்டைமூட்டு ; கிளப்பிவிடு ; வீடெழுப்பு ; இசையெழுப்பு .
எழுப்புதல் எழும்பச்செய்தல் ; துயில்எழுப்புதல் ; உயிர்பெற்றெழச் செய்தல் ; ஒலியெழுப்புதல் ; ஊக்கம் உண்டாக்குதல் ; கலகம் முதலியென மூட்டுதல் .
எழுபவம் உயர்பிறப்பு ; எழுவகைப் பிறவி .
எழுபிறப்பு எழுவகைப் பிறப்பு ; தேவர் , மனிதர் , விலங்கு , பறப்பன , ஊர்வன , நீர்வாழ்வன , தாவரம் ; மேல்வரும் பிறப்பு .
எழுபோது விடியற்காலம் ; உதயகாலம் .
எழும்பல் நில விவரம்பற்றிய கைக்குறிப்புப் புத்தகம் .
எழும்புதல் உயர்தல் ; உறக்கம்விட்டெழுதல் .
எழுமதம் நூலாசிரியருக்குரிய எழுவகைக் கொள்கைகள் ; அவை , உடன்படல் , மறுத்தல் , பிறர்தம் மதம் மேற்கொண்டு களைதல் , தான் ஒன்றனை நாட்டி அதனை நிலைநிறுத்தல் , இருவர் மாறுகோள் ஒருதலை துணிவு , பிறர்நூற் குற்றங் காட்டல் , பிறர் மதத்தைக் கொள்ளல் என்பன , யானைமதம் , கன்னம் இரண்டு , கண் இரண்டு , கைத்துளை இரண்டு , குறி ஒன்று ஆகிய ஏழிடத்திலிருந்து தோன்றும் மதநீர் .
எழுமலை கதிரவன் தோன்றும் மலை , உதயகிரி ; ஏழு பெருமலைகள் ; கயிலை , இமயம் , மந்தரம் , விந்தம் , நிடதம் , ஏமகூடம் , நீலகிரி .
எழுமான் எழுமான் பூண்டு .
எழுமான்புலி எழுமான் பூண்டு .
எழுமீன் ஏழு நட்சத்திரங்கள் , சப்தரிஷி மண்டலம் .
எழுமுகனை தொடக்கம் .
எழுமுடி வெல்லப்பட்ட ஏழரசர் முடியாற் செய்த சேரன் மாலை .
எழுமுரசு எழுச்சி முரசு , அரசன் பயணத்தை அறிவிக்கும் முரசு .
எழுதாக்கேள்வி மறை ,வேதம் .
எழுதாவெழுத்து அச்செழுத்து .
எழுதிக்கொள்ளுதல் பதவிசெய்தல் , அடிமையாக்குதல் ; விண்ணப்பம் செய்தல் .
எழுதிவைத்தல் சாசனம் செய்துவைத்தல் .
எழுதீவு நாவல் , இறலி , இலவம் , கிரவுஞ்சம் , குசை , தேக்கம் , புட்கரம் என்னும் ஏழு தீவுகள் .
எழுதுகொடி முலைமேல் எழுதும் தொய்யில் .
எழுதுகோல் தூரியக்கோல் ; ஓவியம் வரையும் கோல் ; எழுத்து வரையும் கோல் .
எழுதுதல் எழுத்து வரைதல் ; ஓவியம் வரைதல் ; இயற்றுதல் ; விதியேற்படுத்துதல் ; பாவை முதலியன ஆக்குதல் ; அழுந்தப் பதித்தல் ; பூசுதல் .
எழுதுபடம் துணிமேல் எழுதிய படம் .
எழுதுவரிக்கோலம் மகளிர் ஆகத்து எழுதுங்கோலம் .
எழுதுவரிகோலம் மகளிர் ஆகத்து எழுதுங்கோலம் .
எழுந்தபடி நிலைத்தபடி , நேரிட்டபடி , கண்டபடி .
எழுந்தருள்படி தெய்வத் திருமேனிப் புறப்பாடு ; பெரியோர் வருகை .
எழுந்தருளியிருத்தல் தெய்வம் குடிகொண்டருளுதல் ; பெரியோர் வீற்றிருத்தல் .