சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| காடுவெட்டி | மரம் வெட்டுபவன் ; நாகரிகம் அற்றவன் ; சிறு மண்வெட்டி ; பல்லவர்களின் பட்டப்பெயர் ; கள்ளர்களின் பட்டப்பெயருள் ஒன்று . |
| காடேறுதல் | காட்டிற்கு ஓடுதல் ; இறக்குந் தறுவாயில் நோய்த்தெளிவு உண்டாதல் . |
| காடை | ஒரு பறவை , குறும்பூழ் . |
| காடைக்கண்ணி | காடையின் கண்போன்ற தினைவகை . |
| காடையிறகு | நாடகம் நடிப்போர் தலையில் அணியும் பலநிறமுள்ள இறகு . |
| காண் | காட்சி ; அழகு ; காணுதல் ; முன்னிலையில் வரும் ஒர் உரையசை . |
| காண்கை | அறிவு . |
| காண்டகம் | காடு ; நோய் ; கமண்டலம் ; நிலவேம்பு . |
| காண்டம் | நூலின் பெரும்பிரிவு ; மலை ; எல்லை ; காடு ; நீர் ; அம்பு ; கோல் ; குதிரை ; அடிமரம் ; ஆயுதம் ; முடிவு ; சமயம் ; திரள் ; அணிகலச்செப்பு ; கமண்டலம் ; நிலவேம்பு ; திரைச்சீலை ; ஆடை ; சீந்நில் ; புத்தி . |
| காண்டமந்திரம் | குதிரைகளை வானில் பறக்கச்செய்யும் மந்திரம் . |
| காண்டல் | கண்ணுக்கு நேராகப் பார்த்து அறிகை . |
| காண்டலளவை | கண்ணுக்கு நேராகப் பார்த்து அறிகை . |
| காண்டவதகனன் | காண்டவ வனத்தை எரித்த அருச்சுனன் . |
| காண்டவம் | காண்க : காண்டாவனம் . |
| காண்டவன் | இந்திரன் . |
| காண்டாதிகிருதம் | நிலவேம்பு முதலியவற்றால் ஆன நெய் வடிவாயுள்ள ஒரு கூட்டுமருந்து |
| காண்டாமிருகம் | ஒரு விலங்கு , கல்யானை . |
| காண்டாமிருகரத்தம் | வேங்கைமரம் ; பெருமரவகை ; பிரம்புவகை ; பிசின்வகை . |
| காண்டாவனம் | இந்திரனுக்குப் பிரியமான வனம் . |
| காண்டாவனன் | இந்திரன் . |
| காண்டிகை | கருத்து , சொற்பொருள் , எடுத்துக்காட்டு அடங்கிய உரை . இம் மூன்றோடு வினாவும் விடையுமாய் ஐந்து கூறாயும் அமையும் உரை , சூத்திரப் பொருளைச் சுருங்க உரைக்கும் உரைவகை . |
| காண்டியம் | சரகாண்ட பாடாணம் ; வெக்கை . |
| காண்டிபம் | அருச்சுனன் வில் ; தனுராசி . |
| காண்டிவம் | அருச்சுனன் வில் ; தனுராசி . |
| காண்டீபம் | அருச்சுனன் வில் ; தனுராசி . |
| காண்டீவம் | அருச்சுனன் வில் ; தனுராசி . |
| காட்டெலுமிச்சை | காட்டுநாரத்தை ; காட்டுக்கொழுஞ்சி ; நாய்விளா ; மலைநாரத்தை . |
| காட்டேறி | கேடு விளைக்கும் ஒரு தேவதை . |
| காட்டை | திசை ; எல்லை ; 64 கணங்கொண்ட காலநுட்பம் ; நுனி . |
| காட்பு | வைரம் . |
| காடகம் | ஆடை . |
| காடபந்தம் | தீவட்டி . |
| காடமர்செல்வி | கொற்றவை , துர்க்கை . |
| காடர் | காடுவாழ் சாதியார் , ஆனைமலையில் வாழும் ஒரு சாதியார் . |
| காடவன் | பல்லவர்களின் சிறப்புப் பெயர் . |
| காடவிளக்கு | பெருவிளக்கு . |
| காடன் | மீன்வகை . |
| காடாக்கினி | பெருநெருப்பு , பெருந் தீ . |
| காடாந்தகாரம் | பேரிருள் . |
| காடாரம்பம் | நீர்ப்பாசனமில்லாத பகுதி . |
| காடாரம்பற்று | காட்டுப்புறம் . |
| காடாவிளக்கு | காண்க : காடவிளக்கு . |
| காடாற்று | பால்தெளிப்பு , சஞ்சயனம் . |
| காடாற்றுதல் | பிணம் சுட்ட மறுநாள் எலும்பு திரட்டிப் பால் தெளித்தல் . |
| காடி | புளித்த கஞ்சி ; புளித்த கள் ; சோறு ; கஞ்சி ; புளித்த பழரசம் ; ஊறுகாய் ; ஒருவகை வண்டி ; ஒரு மருந்து ; கழுத்து ; நெய் ; அகழி ; கோட்டையடுப்பு ; மாட்டுக்கொட்டில் ; மரவேலையின் பொளிவாய் . |
| காடிக்காரம் | நெருப்புக்கல் . |
| காடிகம் | சீலை . |
| காடிச்சால் | காடி வைக்குஞ் சால் ; மரவேலையின் பொளிவாய் . |
| காடிச்சால்மூலை | வேள்விச்சாலையில் காடி வைக்கப்படும் வடகிழக்குத் திசை . |
| காடியடுப்பு | கோட்டடுப்பு , கோட்டையடுப்பு . |
| காடியுளி | இழைப்புளிவகை . |
| காடிவெட்டுதல் | பள்ளந்தோண்டுதல் . |
| காடினியம் | வன்மை , கடினத்தன்மை . |
| காடு | வனம் ; மிகுதி ; நெருக்கம் ; செத்தை ; எல்லை ; நான்கு அணைப்புள்ள ஒரு நிலவளவு ; சுடுகாடு ; இடம் ; புன்செய்நிலம் ; சிற்றூர் ; ஒரு தொழிற்பெயர் விகுதி . |
| காடுகட்டுதல் | விலங்கு பறவைகளைக் குறித்த இடத்தில் வாராமல் தடைசெய்தல் . |
| காடுகலைத்தல் | வேட்டைக்காரர் விலங்குகளைக் கலைத்தல் ; வேலைக்காரரை அச்சுறுத்தல் . |
| காடுகாட்டுதல் | ஏமாற்றுதல் . |
| காடுகாள் | கொற்றவை , துர்க்கை . |
| காடுகிழவோள் | கொற்றவை , துர்க்கை . |
| காடுகிழாள் | கொற்றவை , துர்க்கை . |
| காடுகிழான்வெயில் | சூரியன் மறையுங்கால் தோன்றும் மஞ்சள்வெயில் . |
| காடுகெடுத்தல் | காடழித்தல் . |
| காடுகெழுசெல்வி | கொற்றவை . |
| காடுகொல்லுதல் | காட்டை வெட்டியழித்தல் . |
| காடுகோள் | விளைநிலம் காடுபற்றிப்போகை . |
| காடுதரிசு | செடிகள் முளைத்த தரிசுநிலம் . |
| காடுபடுதல் | நிரம்புதல் ; வீணாதல் . |
| காடுபடுதிரவியம் | காட்டிலே உண்டாகும் பொருள்கள் . |
| காடுபலியூட்டுதல் | காட்டில் வாழும் தேவர்களுக்குப் பலியிடுதல் . |
| காடுபிறாண்டி | காடுவாரி . |
| காடுமறைதல் | சாதல் . |
| காடுமேடு | மேடாகவுள்ள தரிசுநிலம் . |
| காடுமேய்தல் | வீணாய்த் திரிதல் . |
| காடுவாரி | செத்தைவாருங் கருவி ; கண்ட பொருளை எல்லாம் சேர்ப்பவன் ; உயிர் வாழ்வதற்கென்று எத்தொழிலையுஞ் செய்பவன் . |
| காடுவாழ்த்து | எல்லோரும் இறந்து போகவும் தான் இறப்பின்றி நிலைபெற்ற புறங்காட்டை வாழ்த்தி உலகவியல்பை விளக்கும் ஒரு புறத்துறை . |
|
|
|