சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| கோவன் | இடையன் ; அரசன் ; சிவன் ; வசிட்டன் . |
| கோவாங்கு | படிதம் என்னும் மாணிக்க விசேடம் . |
| கோவிட்டு | பசுக் சாணம் . |
| கோவித்தியர் | காண்க : கோவியர் . |
| கோவிதன் | அறிஞன் . |
| கோவிதாரம் | காட்டாத்தி ; குரா . |
| கோவிந்தம்போடுதல் | கோவிந்தா என்று சொல்லிக் கையால் வணங்குதல் . |
| கோவிந்தர் | காண்க : கோவலர் . |
| கோவிந்தன் | திருமால் ; நன்குணர்ந்தோன் . |
| கோவியர் | இடைச்சியர் . |
| கோவில் | கோயில் , ஆலயம் , அரண்மனை ; சிதம்பரம் ; திருவரங்கம் . |
| கோவில்வீடு | வீட்டிலமைந்த குலதெய்வங்களின் கோயில் ; கோயிலுக்குத் தருமமாக விடப்பெற்ற வீடு . |
| கோவிலங்கு | விலங்கு அரசனாகிய சிங்கம் . |
| கோவிற்குடியான் | சங்கூதும் பணிசெய்வோன் . |
| கோவிற்புறா | மாடப்புறா . |
| கோவிற்றுறையார் | கோயில் வேலைக்காரர் . |
| கோவின்மை | காண்க : கோயின்மை . |
| கோவெனல் | இரங்கற்குறிப்பு ; பேரொலி செய்தற்குறிப்பு . |
| கோவேள் | குயவர் . |
| கோவேறுகழுதை | அரசர் ஏறும் ஊர்தியாகிய கழுதைவகை . |
| கோவை | கோக்கை ; வரிசை ; ஒழுங்கு ; கோத்த மாலை , அணிவடம் ; ஏற்பாடு ; அகப்பொருட்கோவை ; கொடிவகை . |
| கோவைசியர் | பசுக்களைக் காத்து வாழும் வணிகவகையார் . |
| கோழ் | வழுவழுப்பு ; செழிப்பு ; கொழுமை . |
| கோழம்பம் | குழப்பம் . |
| கோழரை | வழுவழுப்பான அடிமரம் . |
| கோழி | குக்குடம் , ஒரு பறவை , உறையூர் ; விட்டில் ; கோழியவரை ; பன்றிமோந்தான் கிழங்கு ; இடலை . |
| கோழிக்கல் | குறுஞ்சிலைக்கல் . |
| கோழிக்காரம் | கோழிமலம் கூட்டிச் செய்யப் பெறும் ஒரு மருந்துவகை ; கோழியெரு . |
| கோழிக்கால் | கொடியரசு ; கோழிக்கால் போன்ற அடையாளக் குறிவகை . |
| கோழிக்குடி | அசோகமரம் . |
| கோழிக்கூடு | கோழியை அடைத்துவைக்கும் இடம் . |
| கோழிக்கொடியோன் | கோழியைக் கொடியில் கொண்ட முருகன் ; ஐயனார் . |
| கோழிகூவுநேரம் | கோழி கூவும் சமயம் , விடியற்காலம் . |
| கோழிச்சேவல் | ஆண்கோழி . |
| கோழித்தலைக் கந்தகம் | சிவந்த கந்தகம் . |
| கோழிநெஞ்சு | அஞ்சிநடுங்கும் மனம் . |
| கோழிப்பசளை | உமரிக்கீரை . |
| கோழிப்போகம் | விரைவில் விந்து வெளியேறும் புணர்ச்சி . |
| கோழிமுட்டை | சுன்னம் , சுழியம் , கோழியினது முட்டை . |
| கோழிமுள் | கோழிக்காலிலுள்ள கூரிய நகம் . |
| கோழிமுளையான் | ஒரு பூண்டுவகை . |
| கோழியவரை | பெருங் கோழியவரைக் கொடி , அவரைவகை . |
| கோழியாகக் கூவுதல் | கோழிபோலக் கூவுதல் ; மன்றாடுதல் . |
| கோழியான் | முருகக்கடவுள் . |
| கோழியுள்ளான் | ஒரு உள்ளான்குருவிவகை . |
| கோழிவென்றி | சேவலின் போர்வெற்றியைக் கூறும் புறத்துறை . |
| கோழிவேந்தன் | உறையூர் அரசனான சோழன் . |
| கோழை | கபம் , உமிழ்நீர் ; மனத்திட்பமின்மை , இரக்கம் ; சிறுபிள்ளை . |
| கோழைத்தனம் | மனத்திட்பமின்மை , அச்சத்தன்மை . |
| கோழைதீர்தல் | மனத்திடம் பெறுதல் . |
| கோலியன் | காண்க : கோலிகன் . |
| கோலிவருதல் | சுற்றிவருதல் . |
| கோலிளகுதல் | அரசன் இறத்தல் . |
| கோலுதல் | பாத்தி முதலியன வகுத்தல் ; வளைத்தல் ; திரட்டிவைத்தல் ; நீர் முதலியவற்றை முகந்து அள்ளுதல் ; விரித்தல் ; தொடங்குதல் ; உண்டாக்குதல் ; ஆலோசித்தல் ; தியானித்தல் ; அமைத்தல் . |
| கோலுபட்டை | இறைகூடைவகை . |
| கோலெரி | விளக்குத்தண்டின் மேலுள்ள விளக்கு . |
| கோலை | மிளகு . |
| கோலொற்றுதல் | அம்பெய்தல் . |
| கோலோகம் | பசுக்களுக்குரிய விண்ணுலகம் . |
| கோலோர் | மதயானையை அடக்கும் குத்துக் கோற்காரர் . |
| கோவணம் | கீழாடை . |
| கோவணவன் | கோவணந் தரித்த சிவன் . |
| கோவணன் | கோவணம் தரித்த சிவன் ; வசிட்டன் . |
| கோவணாண்டி | கோவணம் மட்டும் உடைய பிச்சைக்காரன் ; கதியற்றவன் . |
| கோவணி | ஆத்திமரம் . |
| கோவதை | பசுக்கொலை . |
| கோவம் | கோபம் ; பொன் ; தம்பலப்பூச்சி . |
| கோவர்த்தனர் | இடையர் ; வணிகர் . |
| கோவல் | திருக்கோவலூர் . |
| கோவலர் | முல்லைநில மாக்கள் , இடையர் . |
| கோவலன் | இடையன் ; கண்ணன் ; சிலப்பதிகாரத் தலைவன் . |
| கோவலி | பற்கிட்டுகை . |
| கோவலூர் | திருக்கோவலூர் . |
| கோவளம் | கடலுக்குள் நீண்ட தரை ; தரை முனையில் உள்ள ஊர் . |
| கோவளை | வாழை . |
|
|
|