சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| தனித்தி | தனியாக விடப்பட்டவள் . |
| தனித்திருத்தல் | தனிமையாயிருத்தல் ; ஒன்றியாயிருத்தல் . |
| தனிதம் | ஒலி ; முழக்கம் . |
| தனிதர் | ஒன்றியாயிருப்பவர் . |
| தனிநிலை | ஆய்த எழுத்து ; தனியே நின்று பொருள் முடியும் செய்யுள் ; ஒப்பற்ற நிலை ; தனித்து நிற்கை . |
| தனிநிலையொரியல் | தாளவிகற்பங்களுள் ஒன்று . |
| தனிப்படுதல் | பிரிந்து ஒன்றியாதல் . |
| தனிப்பாட்டு | விடுகவி . |
| தனிப்பாடல் | விடுகவி . |
| தனிப்பாடு | தனிமை ; முழுப் பொறுப்பு . |
| தனிப்புடம் | உட்காரும்வகை ஒன்பதனுள் ஒன்று . |
| தனிப்புறம் | ஒதுங்கின இடம் . |
| தனிப்பொருள் | ஒப்பு உயர்வற்ற பொருள் . |
| தனிமம் | தனிப்பொருள் , மூலகம் . |
| தனிமுடி | தனியரசு . |
| தனிமுதல் | கடவுள் ; தனிவாணிகம் ; கூட்டு வாணிகத்தில் ஒவ்வொரு பங்காளியும் இட்ட விடுமுதல் . |
| தனிமை | தனித்திருக்கும் நிலைமை ; உதவியின்மை ; ஒதுக்கம் ; ஒப்பின்மை . |
| தனிமைப்பாடு | ஒன்றியான நிலை ; உதவியற்றநிலை . |
| தனிமையாற்றல் | வணிகர் எண்குணத்துள் வாணிகத்தின் பொருட்டுக் குடும்பத்தைப் பிரிந்திருக்கை . |
| தனிமொழி | தொகைப்படாது தனியே நிற்குஞ்சொல் ; பிறமொழியினின்று பிறக்காத மொழி . |
| தனியரசாட்சி | ஏகாதிபத்தியம் . |
| தனியன் | தனித்த ஆள் ; குரு வணக்கமான ஒற்றைச் செய்யுள் ; தனியானவன் ; இனத்தினின்றும் பிரிந்தமையால் மூர்க்கம்கொண்ட விலங்கு ; ஒரு நூலை அல்லது ஆக்கியோனைப் புகழ்ந்து கூறும் தனிச் செய்யுள் . |
| தனியா | கொத்துமல்லி ; அரைக்கச்சை . |
| தனியூர் | பெருநகர் . |
| தனிவலிப்பெருமாள் | குப்பைமேனிப்பூடு . |
| தனிவழி | துணையற்ற வழி . |
| தனிவீடு | தனிமையான வீடு ; ஒற்றைக் குடியுள்ள வீடு ; ஒரே சதுரமான வீடு ; வீடுபேறு . |
| தனு | உடல் ; வில் ; தனுராசி ; சிறுமை ; நான்கு கரங்கொண்ட நீட்டலளவை ; எருத்தின் முக்காரம் ; மார்கழி மாதம் ; ஊன்றிப் பேசுகை ; தக்கன் மகளும் அசுரர்க்குத் தாயுமான காசிபர் மனைவி . |
| தனுக்காஞ்சி | செவ்வழி யாழ்த்திறத்துள் ஒன்று . |
| தனுகாண்டன் | அம்பு ; வில் ; விற்போர் வல்லவன் . |
| தனுகூபம் | மயிர்த்துளை . |
| தனுசன் | மகன் ; தனுவினிடம் ; தோன்றிய அசுரன் . |
| தனுசாத்திரம் | வில்வித்தை . |
| தனுசாரி | இந்திரன் ; திருமால் . |
| தனுசு | வில் ; தனுராசி . |
| தனுசை | மகள் . |
| தனுத்திரம் | கவசம் . |
| தனுத்துருவம் | வில்லுக்குதவும் மரமான மூங்கில் . |
| தனுமணி | ஒரு போரில் ஆயிரம்பேரைக் கொன்ற வீரர் வில்லில் கட்டும் மணி . |
| தனுமானசி | பொருள்மேல் பற்றறுதலையுடைய மனநிலை . |
| தனுமேகசாய்கை | நீலக்கல் . |
| தனுர் | காண்க : தனுசு . |
| தனுர்மாதம் | மார்கழிமாதம் . |
| தனுர்வித்தை | வில்வித்தை . |
| தனுர்வேதம் | வில்வித்தை . |
| தனுரசம் | உடலின் ரசமாகிய வியர்வை . |
| தனுருகம் | மயிர் . |
| தனுரேகை | வில்வடிவான கைக்கோடு . |
| தனுவாரம் | போர்க்கவசம் . |
| தனுவேதம் | காண்க : தனுர்வேதம் . |
| தனுவேதி | வில்லாளி . |
| தனேசன் | குபேரன் . |
| தனை | அளவு குறிக்கப் பிற சொல்லின்பின் வரும் ஒரு சொல் . |
| தனையள் | மகள் . |
| தனையன் | மகன் . |
| தனையை | காண்க : தனையள் . |
|
|