சொல்
|
அருஞ்சொற்பொருள் |
பூவில் | மன்மதனது மலர்வில் . |
பூவிலி | பிறப்பற்றவர் . |
பூவிலை | விலைமாதர் பெறும் அற்றைக்கூலி . |
பூவிழுதல் | கண்ணின் கருவிழியில் வெள்ளை விழுகை ; சுரசுரப்பு நீங்குகை . |
பூவிற்கொம்பு | திருமகள் . |
பூவின்கிழத்தி | திருமகள் . |
பூவினன் | பிரமன் . |
பூவுக்கிடுதல் | காதலன் காதலிக்குப் பரிசங் கொடுத்தல் . |
பூவுயிர்த்தல் | மலர்தல் . |
பூவுலகம் | நிலவுலகம் . |
பூவுலகு | நிலவுலகம் . |
பூவெடுத்தல் | கோயிற்பூசைக்கு மலரெடுத்தல் ; கண்ணில் விழுந்த பூவை நீக்குதல் . |
பூவேலை | பூப்போன்ற சித்திரவேலை . |
பூவை | நாகணவாய்ப்புள் ; காயாமரம் ; குயில் ; பெண் . |
பூவைசியர் | உழவர் ; வேளாளர் . |
பூவைநிலை | காயாம்பூவை மாயவன் நிறத்தோடு உவமித்துப் புகழும் புறத்துறை ; அரசனைத் தேவரோடு ஒப்புக்கூறும் புறத்துறை . |
பூவைவண்ணன் | காயாம்பூ மேனியனாகிய திருமால் . |
பூவொல்லி | உள்ளீடற்ற தேங்காய்வகை . |
பூழ் | காடைவகை ; கானாங்கோழி ; துளை . |
பூழ்க்கை | யானை . |
பூழ்தி | இறைச்சி ; முடைநாற்றம் ; புழுதி ; கொடுமை . |
பூழான் | கவுதாரி ; கானாங்கோழி . |
பூழி | குழைசேறு ; சேற்றிலெழுங் குமிழி ; புழுதி ; தூள் ; திருநீறு ; கொடுந்தமிழ் நாட்டினுள் ஒன்று . |
பூழியன் | பூழி நாட்டுக்குத் தலைவனான சேரன் ; பாண்டியன் . |
பூழியான் | திருநீறு அணிந்த சிவபிரான் ; புழுதியிடத்துள்ளவன் . |
பூழில் | அகில்மரம் ; பூமி . |
பூழை | சிறுவாயில் ; மலைக்கணவாய் ; துளை . |
பூளம் | பூவரசமரம் . |
பூளை | இலவமரம் ; செடிவகை ; வெற்றிப்பூ ; பீளை . |
பூளைசூடி | பூளை அணிந்த சிவபிரான் . |
பூளைப்பூ | பூளைப்பஞ்சு ; பூளைச்செடி . |
பூன்றம் | முழுமை . |
பூன்றாகுதி | காண்க : பூரணாகுதி . |
பூனதம் | பொன் . |
பூனை | ஒரு விலங்குவகை . |
பூனைக்கண் | வைடூரியவகை ; பூனையின் கண் போன்ற கண் . |
பூனைக்காய்ச்சி | தீய்ந்த பயிர் ; கொடிவகை . |
பூனைக்காலி | ஒரு செடிவகை ; கொடிவகை ; காண்க : சிமிக்கிப்பூ . |
பூனைத்திசை | தென்கிழக்கு . |
பூனைப்பிடுக்கன் | ஒரு கொடிவகை ; ஒரு செடிவகை . |
பூனைமயிர் | பூனையின் மயிர்போன்ற வெண்மயிர் ; கொடிவகை . |
பூனைமூலி | குப்பைமேனி . |
பூனைவணங்கி | குப்பைமேனி ; நாயுருவி . |
![]() |
![]() |