சொல்
|
அருஞ்சொற்பொருள் |
யாமளம் | காளியைத் தெய்வமாகக் கொண்ட ஒரு வேதம் ; இரட்டை ; பச்சை ; இளமை . |
யாமளை | பார்வதி ; காளி . |
யாமி | இராத்திரி ; யமன்தேவி ; கற்புடையாள் ; உடன்பிறந்தாள் ; தெற்கு ; மகள் ; மருமகள் . |
யாமிகன் | இரவில் நகரைக் காக்கும் காவற்காரன் . |
யாமியம் | தெற்கு ; சந்தனம் ; தவம் . |
யாமினி | மூன்று யாமங்களையுடைய இரவு . |
யாமுனம் | அஞ்சனக்கல் . |
யாமை | ஆமை ; இரவு ; காண்க : யாழ்பதங்காளி ; தெற்கு . |
யாமைமணை | ஆமையின் வடிவமைந்த ஓர் இருக்கை . |
யாய் | தாய் . |
யார் | யாவர் ; காண்க : நத்தைச்சூரி . |
யாரள் | காண்க : யாவள் . |
யாரி | கதவு ; கள்ளக்கணவன் ; எதிரி . |
யாரும் | எவரும் . |
யாலம் | ஆச்சாமரம் ; இரவு . |
யாவகம் | செம்பஞ்சு ; காண்க : பெரும்பயறு . |
யாவண் | எவ்விடம் . |
யாவது | எது ; எவ்விதம் . |
யாவதும் | சிறிதும் ; காண்க : யாவும் . |
யாவர் | எவர் . |
யாவரும் | எல்லோரும் . |
யாவள் | எவள் . |
யாவன் | எவன் . |
யாவும் | எல்லாம் . |
யாவை | எவை . |
யாழ் | பேரியாழ் , சகோடயாழ் , மகரயாழ் , செங்கோட்டியாழ் என்னும் நால்வகை நரம்புக் கருவி ; மிதுனராசி ; அசுவினிநாள் ; திருவாதிரை நாள் ; பண் ; ஆந்தை . |
யாழ்க்கரணம் | யாழ்மீட்டற்குரிய செய்கை . |
யாழ்செய்தல் | பாடுதல் . |
யாழ்த்திறம் | பண் ; ஐந்து சுரமுள்ள இசை . |
யாழ்தரித்தாள் | பார்வதிதேவி . |
யாழ்ப்பாணர் | யாழ்மீட்டும் பாணர் வகையினர் ; யாழ்ப்பாண நாட்டார் . |
யாழ்பதங்காளி | செவ்வழி யாழ்த்திறத்துள் ஒன்று . |
யாழ்முனிவர் | நாரதர் . |
யாழ்வல்லோர் | காண்க : யாழோர் . |
யாழ | ஒரு முன்னிலை யசைச்சொல் . |
யாழல் | கறையான் . |
யாழோர் | கந்தருவர் . |
யாழோர்கூட்டம் | எண்வகை மணத்துள் ஒன்றான கந்தருவமணம் . |
யாழோர்மணவினை | எண்வகை மணத்துள் ஒன்றான கந்தருவமணம் . |
யாளி | யானையின் துதிக்கையும் சிங்கத்தின் முகமுமுடைய விலங்கு ; அரிமா ; சிம்மராசி ; யானை ; இறைகூடைவகை . |
யாளியூர்தி | யாளியை ஊர்தியாக உடைய காளி . |
யாற்றுநீர் | அடிதொறும் ஆற்றுநீர் ஒழுக்குப் போல நெறிப்பட்டு அற்றுஅற்று ஒழுகுவதான எண்வகைப் பொருள்கோளுள் ஒன்று . |
யாறு | ஆறு . |
யான் | தன்மை யொருமைப் பெயர் . |
யான்மை | அகங்காரம் . |
யானஞ்செய்தல் | செல்லுதல் . |
யானம் | ஊர்தி ; சிவிகை ; மரக்கலம் ; போர்ச்செலவு ; அறைவீடு ; கள் . |
யானெனதெனல் | தன்முனைப்பும் பற்றுடைமையும் வெளிப்படப் பேசுதல் . |
யானை | துதிக்கையுடைய விலங்குவகை ; ஆனை மரம் . |
யானைக்கச்சை | யானையின் கழுத்திலிடும் கயிறு . |
யானைக்கண் | சிறுகண் ; இலை , காய் முதலியவற்றில் விழும் புள்ளி . |
யானைக்கதி | நடனம் , துரிதம் , மந்தரம் , ஓட்டம் என்னும் நான்கு வகைப்பட்ட யானை நடை . |
யானைக்கவடு | யானைபோல் மனத்துள் மறைத்துவைத்திருக்கும் பகைமை . |
யானைக்கன்று | யானைக்குட்டி . |
யானைக்கால் | ஒரு நோய்வகை . |
யானைக்குப்பு | சதுரங்கம் . |
யானைக்குருகு | சக்கரவாகப்புள் . |
யானைக்கை | தும்பிக்கை ; கைவீக்கங் காணும் நோய்வகை . |
யானைகைக்கோள் | பகைவரை எறிந்து அவர் யானையையும் காவலையும் கைக்கொண்டதைக் கூறும் புறத்துறை . |
யானைச்சாலை | காண்க : யானைத்தொழு . |
யானைத்தண்டம் | யானை செல்லும் வழி . |
யானைத்தந்தம் | யானைக்கொம்பு ; யானையின் எலும்பு . |
யானைத்தலைவன் | யானைக் கூட்டத்துள் தலைமைதாங்கும் யானை . |
யானைத்தறி | காண்க : யானைத்தூண் . |
யானைத்திசை | வடக்கு . |
யானைத்திப்பிலி | ஒரு திப்பிலிவகை . |
யானைத்தீ | தணியாப் பசியைத்தரும் நோய் . |
யானைத்தூண் | யானைகட்டும் கம்பம் . |
யானைத்தொழு | யானைகள் கட்டுமிடம் . |
யானைநெருஞ்சி | பெருநெருஞ்சி . |
யானைப்பட்டம் | யானையின் முகவோடை . |
யானைப்படுகுழி | யானையை அகப்படுத்துங்குழி . |
யானைப்பல் | யானையின் கொம்பு . |
யானைப்பாகன் | யானையை நடத்துவோன் . |
யானைப்போர் | யானைகள் ஒன்றோடொன்று செய்யும் போர் . |
![]() |
![]() |
![]() |