சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| வன்னியமறுத்தல் | சிற்றரசரை அழித்தல் . |
| வன்னியன் | சாமந்தன் ; ஒரு சாதியாரின் பட்டப்பெயர் . |
| வன்னிலம் | பாறைப்பாங்கான பூமி . |
| வன்னிவகன் | தீயைத் தாங்குபவனாகிய காற்று . |
| வன்னிவண்ணம் | செந்தாமரை ; செவ்வாம்பல் . |
| வன்னெஞ்சு | கடுமையான மனம் . |
| வனகவம் | காட்டுப்பசு . |
| வனச்சார்பு | காட்டுப்பாங்கான முல்லைநிலம் . |
| வனச்சுவை | நரி ; புலி ; புனுகுபூனை . |
| வனசஞ்சாரம் | காட்டிலே திரிந்துவாழ்கை . |
| வனசந்தனம் | வண்டுகொல்லி ; மரவகை . |
| வனசம் | தாமரை . |
| வனசமூகம் | பூஞ்சோலை . |
| வனசரம் | காட்டுவிலங்கு ; காட்டானை ; காடு . |
| வனசரர் | பாலைநில மக்கள் ; வேடர் . |
| வனசரிதன் | காண்க : வனவாசி . |
| வனசன் | காமன் . |
| வனசுரம் | பாலைநிலம் . |
| வனசை | திருமகள் ; சந்தனமரம் . |
| வனசோபனம் | காண்க : வனசம் . |
| வனதீபம் | காண்க : சண்பகம் . |
| வனதுர்க்கம் | காட்டரண் . |
| வனதேவதை | காடுறை தெய்வம் . |
| வனநரம் | காண்க : வானரம் . |
| வனப்பிரியம் | குயில் . |
| வனப்பு | அழகு ; இளமைநிறம் ; பலவுறுப்புத் திரண்டவழிப் பெறுவதொரு செய்யுள் அழகு ; பெருந்தோற்றம் . |
| வனப்புவண்ணம் | இசைவகை . |
| வனபதி | பூவாது காய்க்கும் மரம் . |
| வனபந்தம் | தடாகம் . |
| வனபலம் | காண்க : ஆனைத்திப்பிலி . |
| வனபோசனம் | சோலை முதலியவற்றில் நடத்தும் விருந்து ; திருவிழா . |
| வனம் | காடு ; ஊர் சூழ்ந்த சோலை ; சுடுகாடு ; நீர் ; மலையருவி ; உறைவிடம் ; வழி ; துளசி ; புற்று ; அழகு ; மிகுதி ; நிறம் . |
| வனமரை | காண்க : ஓரிதழ்த்தாமரை . |
| வனமல்லிகை | காட்டுமல்லிகை ; ஊசிமல்லிகை . |
| வனமா | காண்க : கொடிவேலி ; மரவகை . |
| வனமாலி | திருமால் ; துளசி . |
| வனமாலை | பலவகை நிறமுள்ள மலருந்தழையுங் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை ; துளசிமாலை . |
| வனரஞ்சனி | முலைப்பால் . |
| வனராசன் | அரிமா . |
| வனருகம் | காண்க : வனசம் . |
| வனலட்சுமி | வாழை . |
| வனவசம் | சந்தனமரம் . |
| வனவன் | வேடன் . |
| வனவாசம் | காட்டில் வாழ்கை . |
| வனவாசி | காட்டில் வாழ்பவன் . |
| வனாந்தரம் | காட்டின் உட்பகுதி ; பாலைவனம் . |
| வனாந்தரமாய்க்கிடத்தல் | மிகுதியாய் இருத்தல் . |
| வனி | சுரம் . |
| வனிகை | தோப்பு . |
| வனிதம் | சிறப்பு ; மேன்மை . |
| வனிதை | பெண் ; மனைவி . |
| வனைதல் | உருவம் அமையச்செய்தல் ; அலங்கரித்தல் ; ஓவியம் எழுதுதல் . |
|
|