முதல் - ஔவைநோன்பு வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஔதா அம்பாரி , யானைமேற் பீடம் .
ஔதாரியம் பெருந்தன்மை , உதாரத்துவம் , உதாரகுணம் .
ஔபசாரிகம் உபசாரமான வார்த்தை ; ஒன்றன் தன்மையை மற்றொன்றில் ஏற்றிக் கூறுவது .
ஔபாசனம் வேள்வித் தீயோம்புகை ; இல்லறத்தார் காலையிலும் மாலையிலும் செய்யும் வேள்விச் சடங்கு .
ஔபாசனை வைதிகச் சடங்கு நடத்தல் .
ஔரசபுத்திரன் குலமொத்த கன்னியைத் தீவேட்டுப் பெற்ற புதல்வன் ; தான் பெற்ற பிள்ளை ; உரிமை மகன் .
ஔரசன் குலமொத்த கன்னியைத் தீவேட்டுப் பெற்ற புதல்வன் ; தான் பெற்ற பிள்ளை ; உரிமை மகன் .
ஔரதன் குலமொத்த கன்னியைத் தீவேட்டுப் பெற்ற புதல்வன் ; தான் பெற்ற பிள்ளை ; உரிமை மகன் .
ஔலியா இசுலாமிய அடியார்கள் .
ஔவித்தல் பொறாமைப்படுதல் ; அழுக்காறு கொள்ளல் .
ஔவியம் அழுக்காறு ; பொறாமை ; தேவர்களுக்குச் செய்யும் சடங்கு .
ஔவுதல் வாயால் பற்றுதல் ; கடித்துப்பிடித்தல் ; அழுந்தியெடுத்தல் .
ஔவை தவப்பெண் , ஆரியாங்கனை ; தாய் ; ஔவையார் .
ஔவைநோன்பு செவ்வாய்க் கிழமையில் பெண்கள் நோற்கும் ஒரு நோன்பு .
பன்னிரண்டாம் உயிரெழுத்து ; தாரவிசையின் எழுத்து ; பூமி ; அநந்தன் என்னும் பாம்பு ; விளித்தல் ; அழைத்தல் ; வியப்பு ; தடை இவற்றைக் காட்டும் ஒரு முன்னொட்டு .
ஔக்குறுக்கம் ஔகாரக் குறுக்கம் ; ஔகாரம் தனக்குரிய மாத்திரையில் குறைந்து ஒலித்தல் .
ஔகம் இடைப்பாட்டு .
ஔகாரம் ஔ' என்னும் எழுத்து .
ஔசனம் உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று .
ஔசித்தியம் தகுதி , உசிதமாந்தன்மை .
ஔசீரம் இருக்கை ; ஆசனம் ; கவரிமான் மயிர் ; படுக்கை .
ஔடணம் மிளகுசாறு .
ஔடதம் மருந்து ; மாற்று மருந்து .
ஔடதவாதி மூலிகையிலிருந்து உயிர் உற்பத்தியாயிற்று என்று கூறுவோன் .
ஔடவம் ஐந்து சுரமட்டும் பயன்படுத்தப்படும் பண் .
ஔடவராகம் ஐந்து சுரமட்டும் பயன்படுத்தப்படும் பண் .
ஔத்தமர்ணிகம் வட்டியோடு தருவதாக வாங்கிய பொருள் .
ஔத்தாலகம் புற்றுத்தேன் .
ஔத்தாலிகம் புற்றுத்தேன் .
ஔத்திரி சிவதீட்சை ஏழனுள் ஒன்று .
ஔத்திரிதீட்சை சிவதீட்சை ஏழனுள் ஒன்று .
ஔதசியம் பால் .
ஔதநிகன் சமையற்காரன் .