சொல்
|
அருஞ்சொற்பொருள் |
கௌணப்பொருள் | இலக்கணை வகையாற் கொள்ளும் பொருள் . |
கௌணம் | முக்கியமல்லாதது . |
கௌணியர் | திருஞானசம்பந்தர் ; பூமியிலுள்ளோர் . |
கௌத்துவக்காரன் | வஞ்சகன் . |
கௌத்துவம் | அத்தநாள் ; திருமால் மார்பில் அணியும் பணி ; பதுமராகம் ; வஞ்சனை . |
கௌதகம் | போதிகை . |
கௌதம் | சிச்சிலிக்குருவி ; கட்டுமானவகை . |
கௌதமன் | ஒரு முனிவன் ; புத்தன் ; நியாயஞ்செய்த அக்கபாதர் ; கிருபாசாரியார் . |
கௌதமி | கோரோசனை ; கோதாவரி ஆறு . |
கௌதமிமை | கோரோசனை ; கோதாவரி ஆறு . |
கௌதாரி | ஒரு பறவை . |
கௌதுகம் | மகிழ்ச்சி ; சால விளையாட்டு ; காப்பாக மணிக்கட்டில் கட்டும் நூல் ; தாலி . |
கௌதூகலம் | மிதிபாகல் . |
கௌந்தி | சமணப் பெண்துறவி ; வால்மிளகு ; கடுக்காய்வேர் . |
கௌபீனசுத்தம் | பிற பெண்களைச் சேராதிருக்கும் தூயதன்மை . |
கௌபீனசுத்தன் | பிற பெண்களைச் சேராதவன் . |
கௌபீனம் | காண்க : கோவணம் , கச்சைச்சீலை . |
கௌமாரம் | இளம்பருவம் ; முருகக்கடவுளே பரம்பொருள் என்று வழிபடுவோரின் சமயம் . |
கௌமாரி | ஏழு மாதர்களுள் ஒருத்தி ; மாகாளி . |
கௌமுதி | திருவிழா ; நிலவு . |
கௌமோதகி | திருமாலின் தண்டாயுதம் . |
கௌரம் | வெண்மை ; பொன்னிறம் . |
கௌரவம் | மேன்மை , பெருமிதம் . |
கௌரவர் | குருகுல வேந்தனான திருதராட்டிரன் மக்கள் , துரியர் . |
கௌரி | பார்வதி ; காளி ; எட்டு அல்லது பத்து ஆண்டுப் பெண் ; பொன்னிறம் ; கடுகு ; புளி நறளைச் செடி ; துளசி ; பூமி ; ஒரு பண்வகை . |
கௌரிகேணி | வெள்ளைக் காக்கணங்கொடி . |
கௌரிசங்கம் | இரட்டை உருத்திராட்சம் . |
கௌரிசங்காமணி | இரட்டை உருத்திராட்சம் . |
கௌரிசிப்பி | சங்கு வடிவுடைய பாண்டம் . |
கௌரிபாத்திரம் | சங்கு வடிவுடைய பாண்டம் . |
கௌரிமைந்தன் | பார்வதி புதல்வனாகிய முருகன் ; விநாயகன் . |
கௌரியம் | கருவேம்பு . |
கௌரியன் | பாண்டியன் பட்டப்பெயர் . |
கௌரிவிரதம் | ஐப்பசி மாதத்தில் கௌரியை நோக்கிப் புரியும் நோன்பு . |
கௌல் | தீநாற்றம் ; நிலக்குத்தகை உடன் படிக்கை . |
கௌவியம் | பசுக் கொடுக்கும் பொருள்களான பால் , தயிர் , நெய் , மூத்திரம் , சாணம் ஆகியவற்றின் சேர்க்கை . |
கௌவுகன் | கீழ்ப்பார்வை . |
கௌவுதடி | கவைத்தடி . |
கௌவுதல் | வாயால் பற்றுதல் ; கவர்தல் . |
கௌவை | ஒலி ; வெளிப்பாடு ; பழிச்சொல் ; துன்பம் ; கள் ; எள்ளிளங்காய் ; ஆயிலியநாள் ; செயல் . |
கௌளம் | ஒரு பண்வகை . |
கௌளி | பல்லி ; நூறு வெற்றிலைகொண்ட கட்டு ; ஒரு பண்வகை . |
கௌளிக்காதல் | நன்மை தீமைகளை அறிவிக்கும் பல்லிச் சத்தம் . |
கௌளிச்சொல் | நன்மை தீமைகளை அறிவிக்கும் பல்லிச் சத்தம் . |
கௌளிப்பாத்திரம் | வெள்ளை வெற்றிலைவகை . |
கௌளிபந்து | ஒரு பண்வகை . |
கௌளிபாத்திரம் | மஞ்சள்நிறக் காய்காக்கும் தென்னைவகை ; தேங்காயோட்டினால் செய்யப்பட்டுத் துறவியர் உணவுகொள்ளப் பயன்படுத்தும் பாத்திரம் . |
கௌ | ஓர் உயிர்மெய்யெழுத்து (க்+ஔ) ; கொள்ளு . |
கௌசல்யம் | திறமை . |
கௌசலம் | திறமை ; சூழ்ச்சி ; ஒரு நாடு . |
கௌசனம் | காண்க : கோவணம் . |
கௌசனை | உறை ; குதிரை முதலியவற்றின் மேற் போடும் மெத்தை . |
கௌசிகபலம் | தேங்காய் . |
கௌசிகம் | கூகை ; பட்டாடை ; ஒரு பண் வகை ; விளக்குத்துண்டு ; பாம்பு ; வியாழன் ; சோகி . |
கௌசிகன் | குசிக மரபினன் , விசுவாமித்திரன் ; இந்திரன் |
கௌசிகை | கிண்ணம் ; விசுவாமித்திரன் ; உடன்பிறந்தாள் . |
கௌசுகம் | குங்கிலியம் |
கௌஞ்சம் | கிரவுஞ்சம் ; அன்றிற்பறவை . |
கௌஞ்சிகன் | பொன்வினைஞன் . |
கௌடநெறி | செறிவு முதலிய வைதருப்ப நெறிக்குரிய குணங்கள் நிரம்பிவாராமல் சொற்பெருகத் தொடுக்கும் செய்யுள்வகை . |
கௌடம் | வங்கத்தில் உள்ள ஓர் இடம் ; கௌடநெறி ; ஒரு மூலிகைவகை . |
கௌடி | ஒரு பண்வகை . |
கௌடிலம் | வளைவு . |
![]() |