சொல்
|
அருஞ்சொற்பொருள் |
ஈசன் | எப்பொருட்கும் இறைவன் ; சிவன் ; தகப்பன் ; அரி ; குரு ; அரசன் ; தலைவன் ; மூத்தோன் ; பச்சைக் கருப்பூரம் ; கௌரி பாடாணம் . |
ஈசன்மைந்தன் | முருகன் ; விநாயகன் ; வீரபத்திரன் ; வைரவன் . |
ஈசன்றார் | கொன்றைமாலை . |
ஈசனாள் | திருவாதிரை நாள் . |
ஈசானகோணம் | காண்க : ஈசானியம் . |
ஈசானதிசை | காண்க : ஈசானியம் . |
ஈசானம் | வடகீழ்த்திசை ; சிவனுடைய ஐந்து முகங்களுள் ஒன்று ; ஒரு சைவ மந்திரம் . |
ஈசானன் | சிவன் ; வடகீழ்த்திசைப் பாலகன் . |
ஈசானியம் | வடகீழ்த்திசை , சனிமூலை . |
ஈசானியமூலை | வடகீழ்த்திசை , சனிமூலை . |
ஈசி | ஓர் இகழ்ச்சிக் குறிப்பு . |
ஈசிதை | காண்க : ஈசத்துவம் . |
ஈசுரமூலி | பெருமருந்துக் கொடி , தராசுகொடி ; பெருங்கிழங்கு . |
ஈசுரல¦லை | கடவுள் திருவிளையாடல் . |
ஈசுரன் | காண்க : ஈச்சுரன் . |
ஈசுரார்ப்பணம் | கடவுளுக்கு உரியதாக்குகை . |
ஈசுவர | அறுபதாண்டுக் கணக்கில் பதினோராம் ஆண்டு . |
ஈசுவரத்துவம் | ஈசுவரனாயிருக்கும் தன்மை . |
ஈசுவரவிந்து | பாதரசம் . |
ஈசுவரன் | காண்க : ஈச்சுவரன் . |
ஈசுவரி | பார்வதி , உமை . |
ஈசுவரிநாதம் | கந்தகம் . |
ஈசுவரிவிந்து | கந்தகம் ; பாதரசம் . |
ஈசை | ஏர்க்கால் ; பார்வதி . |
ஈஞ்சு | ஈச்சமரம் ; பேரீந்து ; காட்டீஞ்சு ; சிற்றீஞ்சு . |
ஈஞ்சை | கொலை ; இம்சை ; இகழ்ச்சி . |
ஈட்டம் | மிகுதி ; திரள் ; கூட்டம் ; தேட்டம் ; பொருளீட்டுகை ; வலிமை . |
ஈட்டி | குந்தம் , வேல் , ஈட்டி ; தோதகத்திமரம் ; சவளம் ; கழுக்கடை ; கழுமுள் ; சலாகை . |
ஈட்டுக்கீடு | சரிக்குச்சரி . |
ஈட்டுத்தொகை | உதவித்தொகை . |
ஈட்டுதல் | கூட்டுதல் ; சம்பாதித்தல் . |
ஈட்டுப்பத்திரம் | அடைமான சாசனம் . |
ஈடகம் | மனத்தைத் கவர்வது . |
ஈடணம் | புகழ் . |
ஈடணாத்திரயம் | ஆசை ; புதல்வன் , மனைவி , பொன் மூன்றிலும் விருப்புறுகை ; துன்பம் . |
ஈடணை | ஆசை ; புதல்வன் , மனைவி , பொன் மூன்றிலும் விருப்புறுகை ; துன்பம் . |
ஈடழிதல் | வலிமை பெருமைகள் கெடுதல் . |
ஈடறவு | பெருமைக்கேடு , மேன்மைக்கேடு . |
ஈடன் | பெருமையுடைவன் ; ஆற்றலுடையவன் ; வலிமை பொருந்தியவன் . |
ஈடாட்டம் | போட்டி ; பணப்புழக்கம் ; நெகிழ்ச்சி ; ஏழைமை நிலை . |
ஈடாதண்டம் | ஏர்க்கால் . |
ஈடிகை | அம்பு ; தூரிகை , எழதுகோல் . |
ஈடு | ஒப்பு ; உவமை ; வலி ; பெருமை ; பிரதி ; கைம்மாறு ; அடகு ; தகுதி ; நேராகுகை . |
ஈடுகட்டுதல் | பிணை கொடுத்தல் , பிணையாதல் ; பொருளிழப்பிற்கு ஈடுசெய்தல் ; பேரன்பு கொள்ளுதல் . |
ஈடுகொடுத்தல் | எதிர்நிற்றல் ; நிகராதல் ; மனநிறைவு செய்வித்தல் ; போட்டி போடுதல் ; பதிலளித்தல் . |
ஈடுகொள்ளுதல் | மனங்கனிதல் . |
ஈடுபடுதல் | அகப்படுதல் ; துன்பப்படுதல் ; மனங்கவிதல் ; வலியழிதல் . |
ஈ | நான்காம் உயிரெழுத்து ; துத்த இசையின் எழுத்து ; ஈ என்னும் பறவை ; தேனீ ; வண்டு ; முன்னிலை அசைச்சொல் ; சிறகு ; அழிவு ; அம்பு ; அரைஞாண் ; இந்திர வில் ; குகை ; கொசு ; தாமரை ; நரி ; பாம்பு ; பார்வதி ; திருமகள் ; வியப்புக்குறிப்பு . |
ஈ | (வி) ஈயென் ஏவல் ; பகிர்ந்து கொடு ; தா ; சொரி . |
ஈக்குடி | சாவிக் கதிர் . |
ஈக்கை | புலிதொடக்கிக் கொடி ; உப்பிலி . |
ஈகம் | விருப்பம் ; சந்தனமரம் ; தியாகம் . |
ஈகாமிருகம் | செந்நாய் . |
ஈகுதல் | கொடுத்தல் ; படைத்தல் . |
ஈகை | கொடை ; பொன் ; கற்பகம் ; இண்டு ; புலிதொடக்கி ; காடை ; காற்று ; மேகம் ; கற்பகமரம் ; இல்லாமை ; ஈதல் ; கொடுத்தல் . |
ஈகையன் | கொடையாளன் . |
ஈகையாளன் | கொடையாளன் . |
ஈங்கண் | இவ்விடம் . |
ஈங்கம் | சந்தனமரம் . |
ஈங்கன் | இங்கனம் ; இவ்விடம் ; இவ்வாறு . |
ஈங்கனம் | இங்கனம் ; இவ்விடம் ; இவ்வாறு . |
ஈங்கிசை | கொலை ; வருத்தம் ; இகழ்ச்சி . |
ஈங்கு | இவ்விடம் ; இண்டங்கொடி ; இவ்வுலகம் ; இப்படியே ; சந்தனம் . |
ஈங்கை | இண்டங்கொடி ; இணடம்பூ ; உப்பிலி . |
ஈச்சப்பி | கடும்பற்றுள்ளன் , ஈயாதவன் . |
ஈச்சு | ஈந்து , ஈச்சமரம் . |
ஈச்சுக்கொட்டுதல் | சீழ்க்கையடித்தல் . |
ஈச்சுர | காண்க : ஈசுவர . |
ஈச்சுரம் | சிவதத்துவம் ஐந்தனுள் ஒன்று , அது ஞானங்குன்றிக் கிரியை உயர்ந்தது . |
ஈச்சுரன் | ஈசுவரன் , கடவுள் ; சிவன் . |
ஈச்சுவரன் | தலைவன் ; கடவுள் ; சிவன் . |
ஈச்சோப்பி | ஈப்பிணி ; ஈயோட்டி ; சிலந்தி . |
ஈசத்துவம் | எண்வகைச் சித்திகளுள் ஒன்று ; செலுத்துகை ; யாவர்க்கும் தேவனாகுதல் . |
ஈசதேசாத்தி | பெருமருந்துக் கொடி . |
ஈசல் | சீழ்க்கை ; செட்டைக் கறையான் , சிறகு முளைத்த கறையான் . |
![]() |
![]() |