பிரம்மபுரீஸ்வரர் கோயில் - சீர்காழி

‘தோடுடைய செவியன் விடையேறி ஓர்தூவெண் மதிசூடிக்
காடுடைய சுடலைப் பொடி பூசிஎன் உள்ளம்கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே.’

“வண்டார் குழலரிவை யொடு பிரியாவகை பாகம்
பெண்தான் மிகவானான் பிறைச் சென்னிப் பெருமானூர்
தண்டாமரைமல ராளுறை தவளந்நெடு மாடம்
விண்தாங்குவ போலும்மிகு வேணுபுரம் அதுவே.”
                (சம்பந்தர்)

‘சிந்தித்து எழுமனமே நினையாமுன் கழுமலத்தைப்
பந்தித்த வல்வினை தீர்க்க வல்லானைப் பசுபதியைச்
சந்தித்த காலமறுத்து மென்றெண்ணி யிருந்தவர்க்கு
முந்தித் தொழுகழல் நாடொறும் நந்தமையாள் வனவே.”
                 (அப்பர்)

‘மற்றொருதுணையினி மறுமைக்குங் காணேன்/வருந்தலுற்றேன்
             மறவாவரம் பெற்றேன்
சுற்றிய சுற்றமும் துணையென்று கருதேன் / துணையென்று நான்
             தொழப்பட்ட ஒண்சுடரை
முத்தியு ஞானமும் வானவரறியா / முறைமுறை பலபல
             நெறிகளுங்காட்டிக்
கற்பனைகற்பித்தகடவுளை யடியேன் / கழுமல வளநகர்க்கண்டு
                கொண்டேனே.’
                 (சுந்தரர்)

‘பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்
துறவி யெனுந்தோல் தோணி கண்டீர் - நிறையுலகில்
பொன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பந்தன்
தன்மாலை ஞானத் தமிழ்.’
        (நம்பியாண்டார்நம்பி-மும்மணிக்கோவை)

                தலபுராணம்
                 பிரமபுரீசுவரர்
நீர்பூத்த பேரொளியாய் உயிர்க்குயிராய் அகண்டிதமாய்
நிறைவாய் நீங்காப்
பேர்பூத்த குணம்குறிகள் இகந்தபழ மறைக்கொழுந்தாய்ப்
பெருமை சான்ற
பார்பூத்த பரையினொடு கலந்துகுரு ஆதிமும்மைப்
படிவ மாகிச்
சீர்பூத்த காழிநகர் அமர்ந்தபிர மேசனையாம்
சிந்தை செய்வாம்.

                திருநிலைநாயகி
ஒருநிலையே உலகனைத்தும் பொருள்நிலைசேர் வெண்டிருநீ(று)
உயர்ந்து வேதம்
கருநிலையால் வளர்ந்தோங்க இரங்குமரு மறைக்குழலி
தன்பால் அன்பால்
பெருநிலைசேர் முலைக்கண்ணும் சிலைக்கண்ணும் இரங்கியஎம்
பிராட்டி அன்பர்
கருநிலைதீர்த் தருள்காழித் திருநிலைநா யகிதுணைத்தாள்
கருத்துள் வைப்பாம்.

                சட்டை நாதர்
துங்க மாமணித் தூணில்வந் திரணியன்
தோள்வலி தனைவாங்கும்
சிங்க வேற்றுரி அரைக்கசைத் துலகெலாம்
தேர்ந்தளந் தவன்மேனி
அங்கம் யாவும்ஓர் கதையதாய்க் கொண்டதன்
அங்கியாப் புனைகாழிச்
சங்க வார்குழைச் சட்டைநா யகன்துணைத்
தாமரைச் சரண்போற்றி

திருவாவடுதுறை ஆதீனம் எட்டாவது குருமகாசந்நிதானம்
    ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக சுவாமிகள் இயற்றியருளிய

         திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ்
கோலொன்று கொண்டகில வலயம் புரக்கவரு
கோமாறன் மேவிய தமிழ்க்
கூடலிற் சமண்மூகர் திருமடத் திட்டஎரி
கொற்றவர் பற்ற மொழியா
மாலொன்று மங்கையர்க் கரசியார் படுதுயரின்
வலிகண்டு சென்று தவிர
வஞ்சப் பெருங்கூனும் வெப்பந் தவிர்த்தருளு
மதுரவா சகமதகு பாய்
காலொன்று மாநதி பரந்துவரு கழனியிற்
கலையெனக் குவளை களைவார்

கண்டுவெரு வித்தங்கள் கைநெரித் தருகுமிடை
கன்னலங் காடு மறையச்
சேலொன்று விளையாடு சீகாழி நாடாளி
செங்கீரை யாடி யருளே
செழுநான் மறைத் தலைவ திருஞான சம்பந்த
செங்கீரை யாடி யருளே.

சிந்துற் றெழுமாமதி அங்கித் - திரளாலே
தென்றற்றரு வாசமிகுந்துற் - றெழலாலே
அந்திப் பொழுதாகிய கங்குற் - றிரளாலே
அன்புற்றெழு பேதை மயங்கித் - தனியானாள்
நந்துற்றிடு வாரியை மங்கத் - திகழாயே
நஞ்சத் தொளிர் வேலினையுந்திப் - பொருவேளே
சந்தக்கவி நூலினர் தஞ்சொற் - கினியோனே
சண்பைப்பதி மேவிய கந்தப் - பெருமாளே.
                  (திருப்புகழ்)

                     -அருகாத

கார்காழில் நெஞ்சக் கவுணியர்க்குப் போதமருள்
சீர்காழி ஞானத் திரவியமே.
                (அருட்பா)

அஞ்சல் முகவரி :-
அ/மி. பிரமபுரீஸ்வரர் திருக்கோயில்
அ/மி. சட்டைநாத சுவாமி தேவஸ்தானம்
சீர்காழி & அஞ்சல் - 609 110
சீர்காழி வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்.

முன்