கொம்பினார் பொழில்வாய்க் குயிலினம்
கோவிந்தன் குணம்பாடு சீர்
செம்பொனார் மதில்சூழ், செழுங்கனி
யுடைத் திருகோட்டியூர்
நம்பனை நரசிங்களை நவின்றேத்து
வார்களைக் கண்டக்கால்
எம்பிரான்றன் சின்னங்கள் இவரிவர்
ரென்றாசைகள் தீர்வனே
(368) பெரியாழ்வார் 4-4-9
என்று பெரியாழ்வாரால் பாடப்பட்ட இத்திருப்பதி பசும்பொன்
முத்துராமலிங்கர் மாவட்டத்தில் உள்ளது.
திருப்பத்தூரிலிருந்து சிவகங்கை செல்லும் பேருந்துகள் யாவும்
திருக்கோட்டியூர் வழியாகத்தான் செல்ல வேண்டும். கோவிலின்
வாசலிலேயே பேருந்துகள் நிற்கும். காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர்
செல்லாமல் நேராக திருக்கோஷ்டியூர் செல்லும் பேருந்தும் உள்ளது.