பவளவண்ணப்பெருமாள் கோவில்
திருப்பவளவண்ணம்
வரலாறு

காஞ்சிபுராணம் என்னும் நூலில் இத்தலம் பற்றிய வரலாறு சிறப்பாய்
பேசப்படுகிறது. பிரம்மனின் யாகத்தைக் கலைக்க சரஸ்வதி தேவி
தொடர்ந்து எத்தனையோ முயற்சிகள் செய்ய அத்தனையும்
பயனின்றிப்போக ஒரு கொடிய அரக்கர் கூட்டத்தைப் படைத்து
அனுப்பினாள். நொடிப்பொழுதில் அந்த அரக்கர் கூட்டத்தை துவம்சம்
செய்து ரத்தம் தோய நின்றார் பெருமாள். இவ்வாறு ரத்தம் தோய
ப்ரவாளேசராக, ப்ரவாளேச வண்ணராக நின்றதால் ப்ரவாளேசரானார்
தூயதமிழில் பவள வண்ணமானார்.

முன் பின்