கவிழ் தும்பை

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : Trichodesma indicum (L.) R.Br.

குடும்பம் : Borginaceae

வளரிடம் : சாகுபடி, தரிசு நிலங்கள், வெற்றிடத்தில் வேகமாக ஆக்கிரமிக்கின்றன. தமிழ்நாட்டில் சாலையோரங்களில் ஆங்காங்கே தானே வளர்கின்றது.

வளரியல்பு : தும்பையிலை வடிவில் சொரசொரப்பான வெளிரிய நிறமுடையவை, அல்லிகள் வெளிர் நீலம், மடல்பிரிவில் மஞ்சள் வண்ணச் சுரப்பி புள்ளிகள், மடல்கள் வால்போல் நீண்டவை, நுனியில் பின்னோக்கி வளைந்தவை, மகரந்ததாள்கள் வெளிநோக்கியவை, மகரந்த பைகள் நீள் உரோமங்கள் உடையவை.

மருத்துவப் பயன்கள: செடி முழுமையும் மருத்துவப் பயனுடையது. பெரும்பாடு, சீதபேதி, மூட்டுவலி, பால்வினை நோய்க் கட்டிகளுக்குச் சிறந்த மருந்தாகச் செயல்படுகிறது.
இலையைத் தேன் விட்டு வதக்கி நீரில் கொதிக்க வைத்து காலை மாலை சாப்பிட்டு வர சூதக வலி தீரும்.