சிறிய லெய்டன் செப்பேடு
ஹாலண்டு நாட்டில் லெய்டன் நகரில் உள்ள பொருட்காட்சியகத்தில்
தமிழகச்செப்பேடுகள் 2 இருக்கின்றன. அவற்றுள் ஒன்று அளவில் பெரியது. மற்றொன்று
சிறியது. இதில் பெரியது முதலாம் இராஜராஜனது காலத்தில் வெளியிடப்பட்டது. இவரது
காலத்தில் ஆனைமங்கலம் என்ற ஊரை, நாகப்பட்டினத்தில் பௌத்தவிகாரம் எடுப்பதற்காகக்
கடாரத்து மன்னன் சூளாமணிபன்மனுக்குத் தானமாகக் கொடுத்ததால் இது ஆனைமங்கலம்
செப்பேடு என்று அழைக்கப்படுகிறது. சிறியது முதலாம் குலோத்துங்கனால் வெளியிடப்பட்டுள்ளது.
இச்செப்பேடு மொத்தம் 3 ஏடுகளையும் 52 வரிகளையும் கொண்டுள்ளது. 1முதல் 11
வரிகள் வரை இங்கு தரப்பட்டுள்ளது. கல்வெட்டு பாடம் : 1. புகழ்மாது விளங்க ஜயமாது விரும்ப நிலமகள்
நிலவ மலர் மகள் புணர உரிமையிற் சிறந்த மணிமுடி செய்தி : கடாரமன்னனின் தூதர்களான ஸ்ரீ வித்யாதர ஸாமந்தன், அபிமானோதுங்க ஸ்ரீ ஸாமந்தன் இருவரும், ராஜராஜனால் கொடையாக வழங்கப்பட்ட ஆனைமங்கலத்திற்கு, முதலாம் குலோத்துங்கனிடம் சில வரிகளை (பழம்படி, அந்தராயம், பன்மை, பண்டைவெட்டி) நீக்கக்கோரியும், முன்பிருந்த காணியாளர்களை நீக்கி, அதன் காணி உரிமை முழுவதையும் பள்ளிச்சங்கத்தார்க்கே வழங்கும்படியும் அதற்குச் சாசனம் வடித்துத் தரும்படியும் விண்ணப்பிக்கின்றனர். எனவே, இதை நிறைவேற்றும் பொறுப்பு அரசு ஆணையின் மூலம் அதிகாரி இராஜேந்திரசிங்க மூவேந்தவேளானிடம் ஒப்படைக்கப்படுகிறது. சாசனத்தை எழுதியவர் - உட்கோடி விக்கிரமாபரணத் தெரிந்த வலங்கை வேளைக்காரரில் ஒருவரான நிலையுடைய பனையன் நிகரிழிச்சோழன் மதுராந்தகன். பள்ளிச்சந்தங்களைப் பட்டியலிட்டபின்பு அதற்கான வரிநீக்கங்கள் அதிகப்படுத்தப்படுகின்றன. இதில் காணிக்கடன், நிச்சயித்த நெல்லு என்ற இரண்டு பேசப்படுகிறது. காணிக்கடன் என்பது அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலவரி . நிச்சயித்த நெல்லு என்பதும் ஒரு வரியினமே. வரிநீக்கம் செய்யப்பட்ட பின்புள்ளதை இவ்வாறாக குறிப்பிட்டிருக்கலாம். பள்ளிச்சந்தங்கள் பட்டியலிட்ட பின்பு அதற்கான வரிநீக்கங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. தானமாக வழங்கப்பட்ட அவ்விடத்திற்குப் பணமாகவும் பண்டமாகவும் பெறும் வரிகளனைத்தும் அப்பள்ளிச்சங்கத்தார்க்கே வழங்கப்பட்டுள்ளன. அப்பள்ளிச்சந்த நிலத்தில் குடியிருந்தோர் அனைவரும் அங்கிருந்து நீக்கப்பட்டு அவ்விடம் முழுவதும் பள்ளிச்சங்கத்தார்க்கே வழங்கப்பட்டுள்ளது. எல்லைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மொத்தமாக 31 3/4 வேலி, 2மா, 1 முந்திரிகை என்பது தெரியவருகிறது. இதில் மற்ற ஊர்களுக்கு இறையிலிக்கப்பட்டதற்குப் பின்புள்ள நிச்சயித்த நெல்லு குறைந்துள்ளது. ஆனால் பிரம்மதேய ஊர்களுக்கு (எண்.2, 7) நிச்சயித்த நெல் அதிகரிக்கப்பட்டுள்ளதுபோல் தெரிகிறது. இந்த மாற்றம் ஏற்கெனவே இவ்வூர்களுக்கு அதிக அளவில் சலுகைகள் வழங்கப்பட்டு வரி குறைக்கப்பட்டுள்ளதால் இருக்கலாம். அப்படி அதிகரிக்கப்பட்ட வரிநெல்லும் மற்றைய ஊர்களைக்காட்டிலும் பாலையூர் பிரம்மதேயத்திற்குக் குறைந்தே வருவதை அட்டவணையில் காணலாம் (எண். 7). காணிக்கடன் மற்றும் நிச்சயித்த நெல்லுக்கான விபரங்கள்
தான நிலத்தின் எல்லை : கிழக்கு: கடற்கரையின் மேற்கிலுள்ள அனைத்து
மணல் குன்றுகளும் பொருள் விளக்கம் : அந்தராயம் -} நிலவரி தவர்த்த பற வரிகள் மெய்கீர்த்தி : குலோத்துங்க சோழனின் மெய்கீர்த்தி பலவகைப்பட்டது.
இவரது முந்தைய கால கல்வெட்டுக்களில் "திரு மன்னி விளங்கும்" என்ற
மெய்கீர்த்தியுடன் இவரது கல்வெட்டுக்கள் துவங்கும். இவரது 4 ஆம் ஆட்சியாண்டு
வரை இவர் "இராசமேசரிவர்மன் இராஜேந்திர சோழ தேவா" என்றேப் புகழப்படுகின்றான்.
6ஆவது ஆட்சியாண்டு கல்வெட்டொன்று " பூ மேல் அரிவை" எனத்துவங்குகிறது.
பெரும்பாலான கல்வெட்டுக்கள் "புகழ் சூழ்ந்த புணரி" என்று துவங்கும்.
ஆயினும் இச்சாசனத்தில் "புகழ்மாது விளங்க" என்று துவங்கி அவர்
சேரரையும், பாண்டியரையும், ஆறாம் விக்ரமாதித்தனையும், ஜெயசிம்மனையும் வெற்றிக்கொண்டதையறிய
முடிகிறது. (பில்ஹனரின் விக்ரமாங்க தேவசரிதத்திலிருந்து விக்ரமாதித்தனை தோற்கடித்த
செய்தியை ஹூல்ட்ஸ் குறிப்பிடுகின்றார்) . |