நாச்சியார் திருமொழி முனைவர் இரா.மாதவி உதவிப் பேராசிரியர் இசைத்துறை இது பதினான்கு திருமொழிகளில் 143 பாசுரங்கள் கொண்ட அரிய இசையை, சூடிக்கொடுத்த நாச்சியார் பாடிய பாசுரங்களால் இப்பெயர் பெற்றது. இதுவும் வைணவ வாழ்க்கையில் சிறப்பிடம் பெற்றிருக்கிறது. வைணவ திருமணங்களில் ஆண்டாள் பாடிய அளவு திருமணப்பாடல் இன்றியமையாத ஒரு சடங்காக அன்று தொட்டு இன்று வரை அமைந்திருக்கிறது. ஆறாம் திருமொழி முழுதும் கனவைப் பாடுவது. வாரண மாயிரம் சூழ வலம் செய்து நாளை வதுவை மணமென்று நாளிட்டு இந்திரன் உள்ளிட்ட தேவர்குழா மெல்லாம் நால் திசையும் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத இத்திருமொழி போலவே பிற திருமொழிகள் எல்லாமே
எளிய சொற்களும் சிறப்பான பொருள் சுவையும் இசைப் பொலிவும் பெற்று விளங்குவன.
நாச்சியார் திருமொழியில் இசைக் குறிப்புக்கள் சில உள்ளன. அவை இன்னிசை, பண்ணுற
நான்மறை, பண்பல செய்கின்றாய், பாஞ்ச சன்னியமே, மருள் ஆகியனவாகும். |