தன்மதிப்பீடு : விடைகள் - II

3.

மணிமேகலை உணர்த்தும் சமூக நீதிக் கருத்துகள் யாவை?

மணிமேகலைக் காப்பியம் உணர்த்தும் சமூக நீதிக் கருத்துகள் பல. அவற்றுள் முதன்மையானது பசிப்பிணி போக்குதலே ஆகும். “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என இதனைச் சிறப்பாக மணிமேகலை பேசும். அதோடு வேள்விக்காகப் “பசுக்கொலை செய்வது பாவம்” என்னும் கருத்தை ஆபுத்திரன் கதை வாயிலாக உணர்த்துகிறது.

முன்