6.0 பாட முன்னுரை
|
பெருங்கதை சிறந்த தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று. வட இந்தியப் பகுதிகளைக் களமாகக் கொண்டு இது இயற்றப்பட்டது. அதேசமயம் தமிழ்ச் சாயலோடு தமிழ்க் காப்பியமாகவே பாடப்பெற்றது. சங்க இலக்கியச் சொல்லாட்சியை மிகுதியாகக் கொண்டது; காப்பிய நயங்களில் சிறந்தது. சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம் முதலிய காப்பியங்களோடு ஒப்ப வைத்து எண்ணப்படுவது. இப்பெருங்கதை பற்றிய அறிமுகமாக இப்பாடம் அமைக்கப்பட்டுள்ளது. |