நன்னூல் கூறும் இடைச்சொல் வகைகள்
குறித்து ஈண்டுக்
காண்போம்.
1) |
வேற்றுமை உருபுகள் |
2) |
வினை விகுதிகள், காலம் காட்டும் இடைநிலைகள் |
3) |
சாரியைகள் |
4) |
உவம உருபுகள் |
5) |
ஏ, ஓ, என்று போன்ற தம் பொருளை
உணர்த்தும்
சொற்கள் |
6) |
செய்யுளில் இசையைக் கூட்ட (நிறைக்க) வரும் சொற்கள் |
7) |
செய்யுளில் அசைநிலையாக வருபவை |
8) |
அச்சம், விரைவு முதலியவற்றைக்
குறிப்பால்
உணர்த்துபவை |
இவ்வாறு இடைச்சொல் எட்டு வகைப்படும். இக்கருத்தை
நன்னூல் பின்வருமாறு கூறுகிறது:
|
வேற்றுமை வினை சாரியை ஒப்பு உருபுகள்
தத்தம் பொருள இசைநிறை அசை நிலை
குறிப்பு என் எண் பகுதியில் தனித்து இயல் இன்றிப்
பெயரினும் வினையினும் பின்முன் ஓரிடத்து
ஒன்றும் பலவும் வந்து ஒன்றுவது இடைச் சொல் |
|
(சூத்திரம் - 419)
|
(ஒப்பு உருபு = உவம உருபு)
இனி இவ்வகைகளின் விளக்கங்களைப் பாடம் இரண்டு
மற்றும் மூன்றில் விரிவாகக் காண்போம்.
|