தமிழக வரலாற்றுக்கான அடிப்படைச்
சான்றுகள் பற்றி விளக்கிக் காட்டுகிறது. தொல்பொருள் சான்றுகள்
பற்றியும், இலக்கியச் சான்றுகள் பற்றியும், அயல் நாட்டவர் குறிப்புகள்
பற்றியும் விரிவாக விளக்கிக் கூறுகிறது.
இந்தப்
பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
சங்க
காலத்தில் அரிய பெரிய வரலாறுகள் புதைந்துள்ளன என்பதை உணரமுடியும்.
சேரர், சோழர்,
பாண்டியர்,
பல்லவர் போன்ற அந்நாளில் அமைந்த அரசுகளைப் பற்றியும், பொருளாதாரம், வாணிகம்
போன்றவற்றைப் பற்றியும் அறிய முடியும்.
சிறந்த வீரர்களாக விளங்கியவர்களுக்கு
நடுகல் வைக்கப்பட்டது பற்றி அறிய முடிகிறது.
அகஸ்டஸ்சீசர் காலத்தில் தமிழகம் உரோம
நாட்டுடன் வாணிகம் மேற்கொண்டதை அறியலாம்.
பல்லவர் காலப் பேரரசுகள் எந்தெந்த
மொழிகளில் சாசனங்களை வெளியிட்டன என்பது பற்றித் தெரிந்து கொள்ளலாம்.