3.5 தொகுப்புரை

இசுலாமிய மதத்தைப் பரப்பும் எண்ணத்துடனும், இந்துக் கோயில்களில் செல்வங்கள் குவிந்து இருக்கின்றன என்பதை உணர்ந்தும், தமிழகத்தில் அரசர்களுக்குள் ஒற்றுமையின்மை காணப்படுகிறது என்பதையெல்லாம் அறிந்தும் இசுலாமியர் படையெடுப்பு நடத்தித் தங்களது ஆட்சியை மேற்கொண்டனர் என்பது பற்றிப் படித்து நன்கு உணர்ந்திருப்பீர்கள்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.
ஜலாலுதீன் அசன்ஷா என்பவன் யார்?
2.
ஜலாலுதீன் அசன்ஷா எப்போது தமிழகத்தில் தன்னாட்சியைத் தொடங்கினான்?
3.
இசுலாமியரை எதிர்த்த போசள மன்னன் யார்?
4.
மூன்றாம் வீரவல்லாளன் தான் கைப்பற்றிய பகுதியை யாரிடம் ஒப்படைத்தான்?
5.
ஜலாலுதீன் அசன்ஷாவுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்றவன் யார்?
6.
வீரவல்லாளனின் உடலை மதுரை மதில் சுவரில் தொங்கவிட்டவன் யார்?
7.
தம்கானி எந்நோயால் இறந்தான்?
8.
சம்புவராயரை வென்றவன் யார்?
9.
யாருடன் மதுரை சுல்தானியரின் ஆட்சி முடிவுற்றது?