இப்பாடமானது
தமிழகத்தில் நாயக்க மன்னர்கள் எவ்வாறு எழுச்சி பெற்றனர் என்பது பற்றி
விளக்குகின்றது.
மேலும்
நாயக்க மன்னர்கள் தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் ஆட்சி செய்தனர் என்றும்,
இவர்களுள் யார் சிறந்து விளங்கினார்கள் என்றும் எடுத்துரைக்கின்றது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்
பெறலாம்?
நாயக்கர்
மன்னர்கள் யார் என்பது பற்றி விளக்கமாகப் புரிந்து கொள்ளலாம்.
நாயக்க
மன்னர்கள், மதுரை நாயக்கர்கள், தஞ்சை நாயக்கர்கள், செஞ்சி
நாயக்கர்கள்,
வேலூர் நாயக்கர்கள் என்று கூறி ஆங்காங்கே ஆட்சி செய்து வந்தது பற்றிய அறிவினைப்
பெறலாம்.
நாயக்க
மன்னர்களுள் மதுரை திருமலை நாயக்கர் மிகவும் புகழ் பெற்று விளங்கினார் என்பதை
அறிந்து கொள்ளலாம்.
மங்கம்மாள்,
மீனாட்சி போன்ற அரசியரும் ஆண்டு வந்தனர் என்பதை அறிந்து கொள்ளலாம்.
நாயக்க மன்னர்கள்
செய்த போர்களையும்,
கட்டடம் கட்டுவதில் அவர்கள் ஆர்வம் காட்டிய செய்திகளையும் விளங்கிக் கொள்ளலாம்.